நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 251


 

உலாம்  - வெளியில்  வியாபிக்கின்ற, மொழியின் - மதுரவசனங்களது,
ஓசை   - சத்தமுமாகிய   இவைகள்,  தன்னுளங்கவர - தன்னுடைய
மனத்தைக் கிரகிக்க, இன்சொல்வீசாரத்து - வசனப்பிரவீசாரத்தில், ஓடு
நாள் - செல்கின்றகாலத்தில், எ-று.                         (87)

541. கொற்றவன் பூர சந்தன குணக்கட றோன்றிப் போகி
    மற்றந்த விமானத் தின்கண் வைடூரியப் பிரபை தன்னுட்
    பெற்றியாற் றோன்றித் தானும் வைடூரியப் பிரப னானான்
    முற்றுமுன் னுரைத்த வாயு முதலவிம் மூர்த்திக் காமே.

     (இ-ள்.)    கொற்றவன்   -   அரசனாகிய,     பூரசந்தன் -
பூர்ணச்சந்திரன்,   குணக்கடல்   தோன்றி - (தனக்கு மேற்கூறியபடி)
ஸம்மியக்ஞானாதி   குணமானது   மிகவும்   உண்டாக,   போகி -
ஆயுரவஸானத்தில் போய், அந்த விமானத்தின்கண் - முன் சொன்ன
மஹாசுக்ர     கல்பத்தில்,      வைடூரியப்பிரபை      தன்னுள் -
வைடூரியப்பிரபையில், பெற்றியால் - தான் அடைந்த புண்ணியத்தின்
தன்மையால்,     தோன்றி    -    பிறந்து,    தானும்  - தானும்,
வைடூர்யப்பிரபனானான்      -    வைடூரியப்     பிரபனென்னும்
பெயருடையவனானான்,       முன்னுரைத்த        -      முன்
பாஸ்கரப்பிரபதேவனுக்குச்  சொன்ன,   ஆயுமுதல   - ஆயுஷ்யம்
முதலானவைகளாகிய, முற்றும் - முழுமையும், இம்மூர்த்திக்கு - இந்த
வைடூர்யப் பிரபதேவனுக்கும், ஆம் - ஆகும்., எ-று.

     மற்று - அசை.                                   (88)

வேறு.

542. பாடலின் மயங்கியும் பவழ வாயினா
    ராடலின் மயங்கியு மரம்பை யாரொடு
    மாடமுஞ் சோலையு மலையும் வாவியு
    மூடுபோய் நீடவ ருவந்து வைகுநாள்.

     (இ-ள்.) (இவ்வாறு    இருவரும்     உதித்தபின்)  பாடலின் -
பாட்டுக்களினால்,   மயங்கியும் - மயக்கமடைந்தும், பவழவாயினார் -
பவழம்போற்  சிவந்தவாயையுடைய நர்த்தன ஸ்திரீமார்களது, ஆடலின்
- நர்த்தனங்களினால்,      மயங்கியும்    -      பிரமையடைந்தும்,
அரம்பையாரொடு - தேவநர்த்தகிகளோடு, (கூடிக்கொண்டு),மாடமும் -
உப்பரிகைகளிலும், சோலையும் - உத்தியானவனங்களிலும், மலையும் -
பர்வதாதிகளிலும்,  வாவியும் - பத்மாதி தடாகங்களிலும், ஊடுபோய் -
இடையிடையிற்   சென்று,   நீடு   - சௌக்கியத்தில் நீடிய, அவர் -
அத்தேவர்கள், உவந்து - சந்தோஷித்து, வைகுநாள் - அங்குத்தங்கி
யிராநின்றகாலத்தில், எ-று.                                (89)