256மேருமந்தர புராணம்  


 

யையுடைய, விமானமதில் - தேவவிமானத்தில், பெரிய வீரன் - மிகுந்த
ஆத்ம   விரியத்தை   யனுஷ்டிக்கும்  அந்த ஸிம்மச்சந்திர முனிவன்,
பிரதியங்கரத்தினை  - பிரீதிங்கரமென்று   பெயர்பெற்ற விமானத்தில்,
மருவினான்    - ப்ரீதிங்கரனென்னும்   அஹமிந்திர     தேவனாய்ச்
சேர்ந்தான், எ-று.

     மற்று - அசை.                                    (99)

553. முப்பத்தோ ராழியான் முடிந்த வாயுக
     முப்பத்தோ ராயிரத் தாண்டு விட்டுணா
     முப்பத்தோர் பக்கத்தைக் கடந்து யிர்த்திடா
     முப்பத்தோர் நான்கதி சயரை வாழ்த்துமே.

     (இ-ள்.)   (அவ்வாறு   சேர்ந்தபின்)    முப்பத்தோராழியால் -
முப்பத்தொரு   கடல்களின்    கணக்கால், முடிந்த - தனக்கேற்பட்ட,
ஆயுகம்    -    பரமாயுஷ்யத்தில்,     முப்பத்தோராயிரத்தாண்டு -
முப்பத்தோராயிரம்   வருஷங்களை,   விட்டு   -  தாண்டி, உணா -
மனஸாஹாரத்தை        பொஜித்து,       முப்பத்தோர்பக்கத்தை -
பதினைந்தரைமாசத்தை,   கடந்து  - தாண்டி, உயிர்த்திடா - உச்வாஸ
நிச்வாஸத்தைச் செய்து,  முப்பத்தோர் நான்கதிசயரை - முப்பத்தினாலு
அதிசயங்களையுடைய    தீர்த்தங்கர     பரமதேவரை,  வாழ்த்தும் -
ஸ்தோத்திரம் செய்பவனானான், எ-று.                       (100)

554. அவதியா னரகமா றாவ தாய்ந்திடா
     யுவதியால் வரும்பய னொன்று மின்றியே
     சிவகதி யவர்க்குப்போ லிவர்க்கு நல்வினை
     யவதியி னுதயத்தா லாகு மின்பமே.

     (இ-ள்.)  அவதியால் - அவதிஜ்  ஞானத்தால், நரகமாறாவது -
ஆறாநரகபரியந்தம்   (உள்ளவை),   ஆய்ந்திடா   -   அறியப்பட்டு,
யுவதியால்  - ஸ்த்ரீமார்களால், வரும் - வருகின்ற, பயன் - காமபயன்,
ஒன்றும் - யாதொன்றும், இன்றி - இல்லாமல், சிவகதி யவர்க்குப்போல்
- மோட்சகதியையுற்ற  ஸித்த பரமேஷ்டிகளுக்குள்ளதுபோல, இவர்க்கு
- இவ்வாறான இந்த அஹமிந்திர தேவர்களுக்கு, அவதியன்உதயத்தால்
- அவதிஜ்ஞான  உதயத்தால், இன்பம் - ஸௌக்கியமானது, ஆகும் -
ஏற்படும், எ-று.                                          (101)

555. அஞ்சிறப் பயர்வுழி யறிவ னாணையா
     லஞ்சிரண் டடிநடந் திறைஞ்ச லல்லது
     அஞ்சிவந் தொருவர்தம் மாணை யிற்செலா
     ரஞ்சொலா ரின்மையா ரகநல் லிந்திரர்.