நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 257


 

     (இ-ள்.) (இன்னும்) அம் - அழகிய,சொலார் - சொல்லையுடைய
ஸ்த்ரீமார்கள்,  இன்மையார்  - இல்லாதவர்களாகிய, அகநல்லிந்திரர் -
நன்மையாகிய இந்த அஹமிந்திர தேவர்கள், அஞ்சிறப்பு - (தீர்த்தங்கா
பரம  தேவர்களுக்கு)  அழகிய பஞ்சகல்யாண பூஜையை, அயர்வுழி -
மற்ற  கல்பவாஸிதேவர்கள்   செய்கின்றகாலத்தில், அறிவன் - கேவல
ஞானத்தையுடைய  அரஹந்தனது,    ஆணையால் - ஆக்கினையால்,
அஞ்சிரண்டடி   -    ஏழடி,   நடந்து - சென்று, இறைஞ்சலல்லது -
வணங்குவதேயல்லாமல்,  அஞ்சிவந்து  -  பயந்துவந்து, ஒருவர் தம் -
ஒருவருடைய,    ஆணையில்   -    ஆக்கினையில்,     செலார் -
செல்லமாட்டார்கள், எ-று.                                 (102)

556. இன்பமே யிடையறா தெழுத லல்லது
    துன்பமுங் கவலையுந் தோகை யன்னவர்க்
    கன்புநண் பும்மிலா வகமிந் திரத்தவன்
    முன்புபின் பழிந்தெய்தா மூர்த்தி யாயினான்.

     (இ-ள்.)   இன்பமே    -    ஸௌக்கியமே,   இடையறாது -
இடைவிடாமல்   எப்போதும்,   எழுதலல்லது  - உண்டாவதேயல்லது,
துன்பமும்     - துக்கமும்,    கவலையும்   -      மனவருத்தமும்,
தோகையன்னவர்க்கு    -    ஆண்மயில்போற் சரீரச்சாயலையுடைய
ஸ்த்ரீமார்களிடத்து,   அன்பு   -    ஆசையும், நண்பும் - அவர்கள்
ஸ்நேகமும், இலா - இல்லாத, அகமிந்திரத்து - இவ்வஹமிந்திரத்திலே,
அவன் - ப்ரீதிங்கரனென்னும் பெயருடைய அவ்வஹமிந்திரன், முன்பு
பின்பழிந்   தெய்தா - முன்னுக்குப்பின் கெடுதியடையாத (அதாவது :
தோன்றிய    சரீரசுகாதிகள்    ஆயுஷ்ய மளவும் விகல்பமடையாத),
மூர்த்தியாயினான்    -      தேவசரீரத்தை      யுடையவனானான்,
எ-று.                                                (103)

557. அருந்தவம் பொருந்திய சீல மாதியாற்
     றிருந்திய நால்வருந் தேவ ராயினார்
     பெருந்துயர் விலங்கிற்றீ வினையில் வீழ்ந்துபின்
     பொருந்தினா னிரயத்துப் பூதி போகியே.

     (இ-ள்.)  (இவ்வாறு)   அரும்   -  தரித்தற்கரிதாகிய,  தவம் -
தபத்தினாலும்,  பொருந்திய   -   சேர்ந்திராநின்ற,   சீலமாதியால் -
சீலாச்சார   முதலியவற்றாலும், திருந்திய - திருத்தமாகிய, நால்வரும் -
(ஸிம்மசேன  வரசனும்,  தேவியும், குமாரர்களிருவரும் ஆகிய) நான்கு
பேர்களும்,   தேவராயினார்   - தேவர்களாயினார்கள், பூதி - ஸ்ரீபூதி
என்னும்   மந்திரியானவன்,    பெருந்துயர்    -      பெரியவாகிய
துக்கங்களையுடைய,    விலங்கில்  - விலங்குஜாதியில், தீவினையில் -
பாபவினையால்,    வீழ்ந்து    -  மன்று தடவை பிறந்து, (அதாவது :
அகந்தன   ஸர்ப்பம்,   சமரீமிருகம், கோழிப்பாம்பு என்னும் மூன்றும்
ஆகி),   பின் - பிறகு, நிரயத்து - மூன்றாநரகத்தில், போகி - சென்று,
பொருந்தினான் - அடைந்து நாரகனானான், எ-று.            (104)