மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 263


 

     புணர்ந்தவை பிரியும் போழ்தும் புதியவந் தடையும் போழ்து
     முணர்ந்துறு கவலை காத லுள்புகா ருள்ள மிக்கார்.

     (இ-ள்.)    (மேலும்)    கணங்கணந்தோறும்   -   ஒவ்வொரு
சமயத்திலும்,   வேறாம்  -  நிலையில்லாமல் பிரிந்து போகும்படியான,
உடம்பினை  -  புத்கலரூபமான  சரீரத்தை,  கண்டு - பார்த்திருந்தும்,
பின்னும்  -  பிறகும்,   மணந்து   -   சேர்ந்து,  உடன்  - உடனே,
பிரிந்தவற்றுக்கு  -  பிரிந்துபோகின்ற  அவைகளுக்கு, மதியிலாதார் -
புத்தியில்லாத   அஞ்ஞானிகள்,   இரங்குவார்   -   வருந்துவார்கள்,
புணர்ந்தவை   -   சேரப்பட்ட   புத்கலரூபமான சரீராதிகள், பிரியும்
போழ்தும் - பிரிகின்ற  காலத்திலும்,  புதிய வந்தடையும் போழ்தும் -
நுதனமானவைகள்    வந்தடைகின்ற    காலத்திலும்,    உணர்ந்து -
அவற்றின்   ஸ்வரூபங்களையறிந்து,   உறு  - அவற்றினாலுண்டாகிய,
கவலையுள்  -  வருத்தத்தினுள்ளும்,  காதலுள் - வாஞ்சையினுள்ளும்,
உள்ள   மிக்கார்   -    புத்தியிற்சிறந்த  பெரியோர்கள் (அதாவது :
ஸம்மியக்    ஞானிகள்),    புகார்   -    சேரார்கள்,   (அதாவது :
அழிவுக்கிரங்குதலும்,    தோற்றத்திற்கு   மகிழ்தலும்  செய்யார்கள்),
எ-று.                                                  (8)

 569. அறம்பொரு ளின்ப மூன்றி லாதியா லிரண்டு மாகும்
     இறந்ததற் கிரங்கி னாலும் யாதொன்றும் பின்னை யெய்தா
     பிறந்துழி பெரிய துன்பம் பிணிக்குநல் வினையை யாக்கு
     மறம்புணர்ந் திறைவன் பாதஞ் சிறப்பினோ டடைக வென்றார்.

     (இ-ள்.)  அறம் - தருமமும்,  பொருள் - பொருளும், இன்பம் -
சௌக்கியமுமாகிய,  மூன்றில்  -  இந்த   மூன்றுகளில்,  ஆதியால் -
முதலில்  சொல்லப்பட்ட  தர்மத்தால், இரண்டும்  -  மற்ற பொருளும்
சுகமுமாகிய  விரண்டும், ஆகும் - உண்டாகும், இறந்ததற்கு - இதற்கு
முன்  இறந்து  போனவைகளுக்கு,  இரங்கினாலும்  - வருந்தினாலும்,
யாதொன்றும்   -   நீங்கிப்போகும்  தன்மையை  யுடைய  யாதொரு
வஸ்துவும்,  பின்னை - பிறகு, எய்தா - நீங்காமல்  அடையமாட்டாது,
(அவ்விதமாயிருக்க),  அதனையறியாது  வருத்தமுற்றால்),  பிறந்துழி -
மறுபடி  வேறு பிறவியையுற்றபோதும்,  பெரியதுன்பம்  -  (அதனால்)
பெரிய   துக்கம்,  பிணிக்கும்   -   கட்டுப்படுத்தும்,   (ஆகையால்)
நல்வினையை   -   புண்ணிய  வினையை,   ஆக்கும்   -  உண்டு
பண்ணும்படியான,   அறம்   -   தருமத்தை,   புணர்ந்து - சேர்ந்து,
இறைவன்   -   ஸர்வஜ்ஞனது,  பாதம் - பாதத்தை, சிறப்பினோடு -
பூஜையாகிய   குணஸ்துதியுடன், அடைக - சேர்வாயாக,  என்றார் -
என்றும் போதித்தார்கள், எ-று.                              (9)

 570. என்றவ ருரைத்த மாற்றத் தெரியுறு மெழுகு நீருட்
     சென்றது போலத் திண்ணென் றிறைவனற் சிறப்போ டொன்றி
     நின்றநா ளுலப்ப மின்னி னீங்கினான் நிலத்தைச் சேர்ந்தா
     னன்றைய நிதானத் தாலே யரிவையா யுரகர் கோவே.