மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 275


 

 596. முத்தணி முகிண்முலை முளரி வாண்முகத்
     தத்தையங் கிளவியைத் தருச கனெனும்
     வித்தக னளகையான் வேந்தற் கீந்தனர்
     முத்திபெற் றாரையொத் தானம் மூர்த்தியே.

     (இ-ள்.)  முத்தணி   -   முத்துமாலைகளை யணிந்த,  முகிழ் -
தாமரை   மொக்குப்போன்ற,   முலை -  ஸ்தனங்களையும்,  முளரி -
தாமரை    மலர்போன்ற,    வாள்    -    ஒளிபெற்ற,     முகம் -
முகத்தையுமுடைய,   தத்தை - கிளிப்பிள்ளை  வசனத்தைப் போன்ற,
அம் - அழகிய,  கிளவியை - வசனம்பொருந்திய  இந்த  ஸ்ரீதரையை,
தருசகனெனும்  -  தர்சகனென்று   பெயர்  கூறப்பட்ட,  வித்தகன் -
சாமர்த்திய புருஷனும், அளகையான்  - அளகைக்கதிபனும்,  (ஆகிய),
வேந்தற்கு - இராஜனுக்கு, (அந்த ஸ்ரீதரையின் தாய்தந்தையர்), ஈந்தனர்
- விவாஹ விதியால்  மணஞ்  செய்து  கொடுத்தார்கள், அம்மூர்த்தி -
அவ்வளாகாபுரியரசனும்,    முத்திபெற்றாரை   யொத்தான்  -  முக்தி
பெற்றவர்களைப்போலவளிடத்தில்   நீங்காத  இன்பத்தையடைந்தான்,
எ-று.                                                  (36)

 597. அளகமுங் குழல்களுந் திருத்தி யம்மலை
     யிளமயி லனையவ ளோடவ் வேந்தறா
     னுளமலி யுவகையி னோடு நாளினால்
     வளரொளி வைடூரியப் பிரபை வானவன்.

    (இ-ள்.)  அளகமும்   -   ஐம்பாலென்னுங்  கூந்தலில்  பின்னி
விடுதலாகிய    பனிச்சையும்,   குழல்களும்    -   சுருட்டிமுடிக்கும்
முடிகளுமாகிய அலங்காரங்களை, திருத்தி -திருந்தச்செய்து, அம்மலை
- அந்த  விஜயார்த்த  பர்வதத்தில், இளம் - இளமைப் பருவமுடைய,
மயிலனையவளோடு    -    ஆண்மயிலுக்குச்   சமானமான   சரீரச்
சாயலையுடையவளாய்      உலாவிய       அந்த   ஸ்ரீதரையோடு,
அவ்வேந்தல்தான்       -      பெருமையிற்       சிறந்தவனாகிய
அவ்வளகாபுராதிபதியானவன்,   உளம்  -  மனதில்,  மலி - நிறைந்த,
உவகையின்  -  சந்தோஷத்துடன்,  (கூடி),   ஓடுநாள்  - செல்கின்ற
காலத்தில், வளரொளி - நீண்ட கிரணத்தையுடைய, வைடூரியப் பிரபை
- வைடூரியப்  பிரபை  விமானத்திலிராநின்ற,  வானவன் - வைடூரியப்
பிரபை தேவனானவன், எ-று.

     நாளினால் என்பதில், இன், ஆல் - அசைகள்.            (37)

 598. இறைவளை யிராமைதன் னிளைய காளைமேற்
     பிறவியி லென்வயிற் பிறக்கு மாய்விடி
     னிறைதவப் பயனெனா நினைத்த சிந்தையின்
     மறுவிலாத் திருவினாள் வயிற்றுட் டோன்றினான்.