28மேருமந்தர புராணம்  


 

    மானமெல் லார்க்கு மொத்து மலர்மலி கிடங்கு பின்னா
    மானமில் லாத வல்லி வனத்திடை மலர்க்கை யேந்தி.

     (இ-ள்)   வானவில்   -   இந்திரதனுசினது    ஒளியையுடைய
தூளிசாலமென்னும் முதல் மதிலை, கடந்து - தாண்டி, மானபீடத்தை -
அவ்விடத்தில் அளவோடுள்ள  பலிபீடத்தை, வணங்கி - நமஸ்கரித்து,
வாழ்த்தி - தோத்திரம்பண்ணி, மான தம்பத்தை - (அதற்குமேல் அந்த
ப்ராசாத  சைத்ய பூமியாகிய  முதல் பூமியின் பேர்பாதியில் நாலு மகா
திக்குகளிலும்  இரா  நின்ற)  மானஸ்தம்பத்தை,  எய்தி  - அடைந்து,
வலங்கொண்டு - பிரதட்சணம் பண்ணி, பணிந்து - வணங்கி, போகி -
(அப்பூமியின்  மற்ற  பாதி  தூரமும்)  சென்று, மானம் - அளவானது,
எல்லார்க்கும் - யாவர்களுக்கும்,  ஒத்து  -  சமத்துவமாகி, மலர்மலி -
புஷ்பங்களினால்  நிறைந்த,  கிடங்கு   -   அகழ்ப் பூமியினிடத்தும்,
போகி - சென்று,  பின்னால் - அதற்கப்பால் இராநின்ற, மானமில்லாத
- அளவில்லாத,  வல்லி - புஷ்பக் கொடிகளையுடைய,  வனத்திடை -
வல்லி  வனத்தில்,  மலர்  -  புஷ்பங்களை,  கை - கையில், ஏந்தி -
தரித்துக்கொண்டு, எ-று.                                   (60)

 61. கோபுரஞ் சுரும்புண் சோலைக் கோபுரங் கொடியின் பந்தி
    கோபுரங் காவுஞ் செம்பொன் மாளிகைக் குழுவுங் குன்றா
    மாபுரி யனைய தூபை மணிமுத்த மணலின் முற்ற
    நூபுரத் தரவ மார்ப்ப நுவலிய கடந்து புக்கான்.

     (இ-ள்)    கோபுரம்    -    உதயதரமென்னும்    மதிலையும்
கோபுரத்தையும்,  சுரும்புண்சோலை   -   (அம்மதிலினுட் பாகத்தில்)
வண்டுகளானவை    மதுவை    உண்ணும்     தோப்புகளையுடைய
வனபூமியையும்,    கோபுரம்    -    பிரீதிதரமென்னும்  மதிலையுங்
கோபுரத்தையும்,   கொடியின்  பந்தி   -   அதனுள் த்வஜவரிசைகள்
இராநின்ற  த்வஜபூமியையும்,  கோபுரம்  -  கல்யாணதர   மென்னும்
மதிலையுங் கோபுரத்தையும்,  காவும் - அதற்குள் உள்ள கற்பகவிருஷ
பூமியையும்,   செம்பொன்   -  சிவந்த பொன்னாலாகிய,  மாளிகைக்
குழுவும்   -   உப்பரிகையின்   கூட்டங்களையுடைய   கிரஹாங்கண
பூமியையும்,  குன்றா  -  குறைவில்லாத,  மாபுரியனைய - பெரிதாகிய
பட்டணத்துக்குச்    சமானமாகிய,    தூபை   -   ஸ்தூபைகளையும்,
மணிமுத்தம்  -  முத்துமணிகளாகிற,  மணலின் - மணல்களையுடைய,
முற்றம்  -  வாசல்களில்,  நூபுரத்து - பாதச்சிலம்புகளின்,  அரவம் -
சப்தம்,   ஆர்ப்ப  -  சப்திக்க,   நுவலிய  -  சொல்லப்பட்ட  சப்த
பூமிகளை,  கடந்து - தாண்டி,  புக்கான் - உள்ளே  போயடைந்தான்,
எ-று.

     இதனால்    சப்த    பூமிகளையும்   மும்மதில்கள்   கோபுரம்
முதலியவற்றையும் தாண்டிச் சென்றான் என்பது பெறப்படும்.      (61)

 62. பத்தொடு பதினா றாய பைம்பொனன் மணிய வற்றிற்
    சித்திரத் தியற்றப் பட்ட திருநிலை யத்தை யெய்தி