280மேருமந்தர புராணம்  


 

னுடைய,  இடை  -  இடையேயாகும்,  துடைகள் - துடைகளிரண்டும்,
மாளிகை  -  உப்பரிகையினுடைய, தூண்கள்போலும் - ஸ்தம்பங்களை
நிகர்க்கும்,  நடை   -    நடை  யானது, வ ிடை - வீருஷபத்தினது,
ஒதுக்கமாம்  -  நடையேயாகும், காலடி   -  பாதங்களின்  அடிகள்,
நளினம்  - தாமரை மலர்களேயாகும், (மேலும் அவன்), அடையலர்க்கு
- சத்துரு   ராஜாக்களுக்கு,    அரியோடு  - சிம்மத்தோடு, கூற்றம் -
இயமனும், அன்னன் - ஒப்பவனாவான், எ-று.                 (48)

 609. கலைகுண நூல்களிற் காம னன்னவன்
     மலைமிசை மன்னர்தங் கன்னி வல்லிகண்
     முலைமலி போகத்தின் மொய்ம்பன் மூழ்குநா
     ணிலையின்மை சூரியா வருத்த னெண்ணினான்.

    (இ-ள்.)   கலை  -  அறுபத்துநாலு  கலைஞானமாகிற, குணம் -
மேன்மை  பொருந்திய,  நூல்களில் - சாஸ்திரங்களில், மொய்ம்பன் -
வல்லவனும்,   காமனன்னவன் - அழகில்  மன்மதனை  நிகர்த்தவனும்
ஆகிய   இந்தக்   கிரணவேகன்,  மலை   மிசை  - அவ்விஜயார்த்த
பர்வதத்திலுள்ள,   மன்னர்தம் - ராஜாக்களுடைய, கன்னி வல்லிகள் -
புஷ்பக்கொடிபோன்ற    இளமைப்பருவமுடைய  புத்ரிகளின்,  முலை
மலி - ஸ்தனங்களில்  நிறைந்திராநின்ற, போகத்தின்  - போகத்திலே,
மூழ்குநாள் - அழுந்தி  அனுபவிக்கின்ற  காலத்தில், சூரியா வருத்தன்
- சூரியாவர்த்த  மஹாராஜான்,   நிலையின்மை   -  ஸம்ஸாரத்தினது
அனித்திய ஸ்வரூபத்தை, எண்ணினான் - நினைத்தான், எ-று.    (49)

 610. களிற்றுனுக் கரசனென் றாலுங் காலவை
     யளற்றினுட் செறிந்தபோ தாவ தில்லைநம்
     வெளிற்றினிற் கட்டிய வினையின் வெந்துய
     ரளற்றின்வீழ் போதுமொன் றாவ தில்லையே.

    (இ-ள்.)(அவ்வாறு நினைத்து ஒரு யானையானது), களிற்றினுக்கு -
யானைகளுக்கெல்லாம்,   அரசனென்றாலும்   -   ராஜாவாகிப்  பலம்
பொருந்திய   பட்டத்து   யானையாயிருந்தாலும், காலவை - கால்கள்,
அளற்றினுள் - சேற்றில், செறிந்தபோது - புதைந்தபோது, ஆவதில்லை
- அதனின்றும்     வெளியேறுதல்    அதனால்      முடிவதில்லை,
(அதைப்போல),  நம் - நம்முடைய, வெளிற்றினில் - அஞ்ஞானத்தால்,
கட்டிய  -  நம்மைப் பந்தித்த, வினையின் - கர்மங்களினால், வெம் -
வெப்பம்   பொருந்திய,  துயர்  - துக்கமாகிற, அளற்றின - சேற்றில்,
வீழ்போதும்   -   நாம்  வீழ்கின்ற   காலத்திலும்,  ஆவது ஒன்று -
(அதனின்றும்  நம்மை வெளியேற்றிக் கொள்ள  நம்மால்) ஆவதாகிய
ஒரு காரியம், இல்லை - கிடையாது, எ-று.

    இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                     (50)