611. மடந்தையர் மனத்தினுங் கடிது மாய்ந்திடு1
முடம்பொடு கிளையென வுள்ளம் வைத்தவன்
றடங்கண்வெம் முலையவர் சூழச் சாம்பிய
மடங்கல்போல் மலைநின்று நிலத்தின் வந்தனன்.
(இ-ள்.) உடம்பொடு -
இச்சரீரத்தோடு, கிளை - பந்துத்வமும்,
(ஆகிய இந்த அனுபசரித வுபசரித அசத்பூதங்களெல்லாம்), மடந்தையர்
- ஸ்திரீகளது, மனத்தினும் - மனதைப்பார்க்கிலும், கடிது - சீக்கிரமாக,
மாய்ந்திடும் - நிலையாமல் நீங்கிப்போவனவாம், என - என்று, அவன்
- அச்சூர்யாவருத்தன், உள்ளம் - மனதில்,
வைத்து - (சம்சாரம்
அனித்யஸ்வரூபமென்பதை) ஸ்திரம்செய்து, தடம் -
விசாலம்
பொருந்திய, கண் - கண்களையும், வெம் - விருப்பத்தைச் செய்கின்ற,
முலையவர் - ஸ்தனங்களையுமுடைய ஸ்த்ரீமார்கள், சூழ - சூழ்ந்துவர,
சாம்பிய - நொந்த, மடங்கல்போல் - சிம்மத்தைப்போல, மலைநின்று -
விஜயார்த்த பர்வதத்தினின்றும், (இறங்கி),
நிலத்தின் - பூமியில்,
வந்தனன் - வந்தான், எ-று. (51)
வேறு.
612. மலைவின் மாதவன் மாமுனிச் சந்திரன்
றலைவ னன்னவன் றன்சர ணாம்புயம்
நிலனு றப்பணிந் தேத்திநின் றெண்வினைப்
பலமெ னோபணிக் கென்று பணித்தனன்.
(இ-ள்.) (அவ்வாறு
வந்தவன்) மலைவில் - மாறுபாடில்லாத, மா
- பெருமை பொருந்திய, தவன் - தபத்தையுடையவனாகிய,
மா -
சிறந்த, முனிச்சந்திரன் - முனிச்சந்திரனென்னும், தலைவனன்னவன்
தன் - ஸர்வஜ்ஞனை நிகர்த்த முனிவரனது, சரனாம்புயம் -
பாதத்
தாமரையில், நிலனுற - தனது சிரம் முதலாகிய அங்கங்கள் பூமியில்
படும்படி, பணிந்து - தாழ்ந்து வணங்கி, ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி
(பிறகு), நின்று - எழுந்து எதிரில்
நின்று, எண்வினை -
அஷ்டகருமங்களின், பலன் - பலனானது, எனோ - எவ்வகைத்தோ,
பணிக்கென்று - அதை எனக்குச் சொல்லுக என்று, பணித்தனன் -
கேட்டான், எ-று.
(52)
வேறு.
613. அறிவொடா லோகந் தன்னை யாரிருள் போல நின்று
மறுதலைச் செய்யும் ஞான காட்சியா வரணம் வாளி
னெறியும்வா யிரண்டி னொன்றி னஞ்சொன்றி னமிர்தம் பூசிச்
செறியநா வைத்த லொக்குந் தீயநல் வேதனீயம்.
___________________________________________
1வீந்திடும் என்றும் பாடபேதமுண்டு.
|