மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 287


 

 624. ஆயதங் காத மாகி யதனரை யகல மாகி
     யாயதங் கால்கு றைந்த துயரமா யமல மாகி
     நீதியா னின்ற கந்த குடிகளு நூற்றெட் டாகி
     வாய்தலோர் மூன்று முன்பு மண்டபம் பலவு மாமே.

     (இ-ள்.)  (இன்னும் அங்கே), ஆயதம் - நீளமானது, காதமாகி -
ஒரு  காதமாகி, அகலம்  -  அகலமானது,  அதனரை - அந்த  ஒரு
காதத்தில்  பாதியாகிய   அரைக்காதம்,   ஆகி  - ஆய், ஆயதம் -
நீளத்தில்,  கால் குறைந்தது - கால் குறைந்தது போக முக்கால் காதம்,
உயரமாய் - உன்னதமாகி,   அகலமாகி - நிர்மலகரமாகி,  நீதியால் -
வரிசைக்கிரமத்தால், நின்ற - வரிசையாக நிலைபெற்ற, கந்த குடிகளும்
- கந்த குடி  மண்டபங்களும்,   நூற்றெட்டாகி - நூற்றெட்டு என்கிற
கணக்கையுடையனவாய்,   வாய்தலோர்   மூன்று  -  மூன்று  வாசல்
வழிகளையுடையனவாய்,     முன்பு    -   எதிரில்,    மண்டபம் -
மண்டபங்களானவை,பலவுமாகும்    -   அனேகமாகவும்  விளங்கும்,
எ-று.                                                  (64)

வேறு.

 625. தூபைசே தியமரம் வைச யந்தையாம்
     மாபெருங் கொடிமலி மான தம்பநற்
     கோபுரங் கொடிநின்ற தோர ணமிவை
     வாபிமா நந்தையை யெய்த வந்தவே.

     (இ-ள்.) தூபை - ஸ்தூபையும், சேதியமரம், சைத்யவிருட்சமும்,
வைசயந்தையாம்  - வைஜயந்தை  யென்னும்  பெயரையுடையதாகிய,
மாபெருங்கொடி  -  சிறந்த   பெரிதாகிய  இந்திரத்துவஜமும், மலி -
அளவுபோல் நிறைந்திராநின்ற, மானதம்பம் - மானஸ்தம்பமும், நல் -
நன்மையாகிய,   கொடிநிறை - த்வஜங்களால்  நிறைந்த, கோபுரம் -
கோபுரமும், தோரணம் - அந்தக்கோபுர   வாசல்  வழிகளில் உள்ள
தோரணமும்,   (ஆகிய),   இவை   -   இவைகளெல்லாம், வாபி -
தடாகமாகிய,   மா  -  பெருமை  பொருந்திய, (கீழ்த்திசையிலுள்ள),
நந்தையை  -  நந்தையென்கிற   தடாகத்தை, எய்த - அடையும்படி,
வந்த - அக்கோயிலுண்ணின்று  மொன்றின்பி னொன்றாக வரிசையாய்
வரப்பெற்றனவாம், எ-று.                                  (65)

 626. ஆடுமா மிசைவந்த கிரண வேகனற்
     கூடமா லுறைவிடங் குறுகு மெல்லையு
     ணீடியா திழிந்துபின் னிலத்தின் மேல் வராக்
     கோடுநீள் கோபுரங் கடந்து கும்பிடா.

     (இ-ள்.) (இவ்வாலயத்தின்  சிறப்பு  இங்ஙனமிருப்ப),  ஆடும் -
நர்த்தனஞ்   செய்யும்படியான,   மாமிசை  -   குதிரையின்மேலேறிக்
கொண்டு, வந்த - வந்துள்ள,