மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 291


 

மையது  -  முடிவில்லாத  உனது  ஸ்வரூபமானது,  என்கணதாயது -
என்னிடத்திலு முண்டென் றுணரப்பெற்றது, எ-று.              (73)

 634. வேரி யார்மலர் மீதுசெல் போதுபூ
     மாரி யாய்மூ வுலோக மெடுக்குமா
     வீரி யாவடி யேன்வினை தீரநல்
     வாரி யாவரு ளாயற வேந்தனே.

     (இ-ள்.) அறவேந்தனே - தர்மசக்ரத் தலைவனாகிய ஸ்வாமியே!,
வேரி  -  வாசனையால்,   ஆர் - நிறைந்த,  மலர்மீது - தேவநிர்மித
சோணாம்புஜத்தின்   மேல்,   செல்போது - நீ செல்கின்ற ஸ்ரீவிஹார
காலத்தில்,   பூமாரியாய்  -  தேவர்களால்   பொழியப்பட்ட   புஷ்ப
வருஷத்தை   யுடையவனே!,   மூவுலோகம்  - இம்மூன்றுலகத்தையும்,
எடுக்கும்   -  ஞானத்தில் தரித்தேந்தும், மா - பெருமை பொருந்திய,
வீரியா   -   அனந்த வீரியத்தை யுடையவனே!, நல் - நன்மையாகிய,
ஆரியா - குணங்களால் நிறைந்தவனே!,  அடியேன் - அடியேனுடைய,
வினைதீர - கரும நீங்கும்படியாக, அருளாய் - அருளுவாயாக, எ-று.

     இங்ஙன   முரைத்ததால்  உனது   பக்தியே   எனக்காகக்கடவ
தென்பதும், அதனால் வினை நீங்குமென்பதும் பெறப்படும்.       (74)

 635. மாரி மொக்குகளின் மாய்ந்து பிறந்துமாற்
     றார ணத்திலென் னாழ்துயர் போயதன்
     பார மாயவுன் பாத மடைந்தபின்
     வாரி வீழ்ந்தவன் மால்கரை சேர்ந்தவாம்.

     (இ-ள்.)    மாரி    -   மழையினாலாகிய,    மொக்குகளின் -
நீர்க்குமிழிபோல, மாய்ந்து - நீங்கியும், பிறந்து - உண்டாகியும், மாற்று
- ஸம்சாரமாகிய, 1ஆரணத்தில் - காட்டில்,  (ஏற்பட்ட), என் - எனது,
ஆழ்துயர்  - ஆழ்ந்த துக்கமானது, அன்புஆர் - அன்பு பொருந்திய,
அம்ஆய  -  அழகும்   பரிசுத்தமுமுள்ள,   உன் - உனது, பாதம் -
பாதங்களை,   அடைந்தபின் - அடைந்த பிறகு, போயது - நீங்கியது,
(அவ்வாறு   நீங்கியதானது),   வாரி -  சமுத்திரத்தில்,  வீழ்ந்தவன் -
வீழ்ந்து மூழ்கியவன்,   மால் - பெரிதாகிய,  கரை - அதன் கரையில்,
சேர்ந்த - அடைந்ததன்மை, ஆம் - ஆகும், எ-று.             (75)

 636. பொங்கு சாய்மரை பூமழை மண்டிலஞ்
     சிங்க மேந்தணை பிண்டி செழுங்குடை

____________________________________________

     1.ஆரண்யத்தில்   என்பது   ஆரணத்தில் என்று எதுகைபற்றிச்
செய்யுளில் வந்தது.