மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 293


 

மாகிய,  (அதாவது : ஸம்ஸார விராகத்தை யடைந்த), குணத்தினான் -
குணத்தையுடைய   கிரணவேகராஜன்,   இறைஞ்சி - மறுபடியும் அம்
முனிவனை வணங்கி,  இருந்தவன் - அவரனுமதிப்படி  இருந்தவனாய்,
எழுந்து   -   பின்னர்   எழுந்து   நின்று,   மாற்றகத்தும் - இந்தச்
சம்சாரத்திலும்,     வீட்டினும்   -    மோக்ஷத்தும்,   பொருந்தும் -
சேரும்படியான, காரணம் - ஸம்ஸார  மோக்ஷ காரணங்களை, அருள்
- உபதேசித்தருள்க,   போற்றி -  நினக்கு   நமஸ்காரம், என்றனன் -
என்று வினவினான், எ-று.                                 (78)

 639. இந்துவி னெழிலோடொத் திலங்கு பாறைமே
     னின்றபிண் டியினிழ லிருந்தச் சாரணன்
     மன்றலர் முடியினாய் மாற்றும் வீட்டுமாஞ்
     சென்றதத் துவந்தெளி யாமை தேறலால்.

    (இ-ள்.)   (அவ்வாறு   கேட்டபோது)   நின்ற - அக்கோயிலுட்
பிராகாரத்தில்   நின்ற,   பிண்டியினிழல்   - அசோக விருக்ஷத்தினது
நிழலில்,   இந்துவினெழிலோடொத்து     -    சந்திர   கிரணத்தின்
அழகுக்கொப்பாகி,    இலங்கும்    -    விளங்கும்,   பாறைமேல் -
சந்திரகாந்தச்    சிலையின்மேல்,     இருந்து   -  உட்கார்ந்திருந்து,
அச்சாரணன்   -   சாரண   பரமேஷ்டியாகிய   வந்த  அரிச்சந்திர
முனிவன்,   (கிரணவேகனை   நோக்கி),  மன்றலர் - வாசனையோடு
மலர்ந்த   புஷ்பமாலையணிந்த,    முடியினாய்  -   முடியையுடைய
வரசனே,   சென்ற - இவ்வுலகத்தில்  நடந்த,   தத்துவம் -  ஜீவாதி
தத்துவங்களை,      தெளியாமையால்     -      அறியாமையாகிய
அஞ்ஞானத்தால்    (ஏற்படும்)    மித்தியாத்துவத்தால்,   மாற்றும் -
சம்சாரத்திலும்,    தேறலால்    -   தெளிதலாகிய     ஸம்மியக்துவ
ஞானத்தால்,    வீட்டும்   -   மோக்ஷத்திலும்,   ஆம்  - சேர்க்கை
ஆகும், எ-று.                                           (79)

வேறு.

 640. அத்தி நித்த மனித்த மவாச்சிய
     மொத்த வேற்றுமை யொற்றுமை சூனியந்
     தத்து வம்மிவை யொன்றிய தன்மையால்
     மித்த மாறும்வே றேயென வேண்டினால்.

     (இ-ள்.)   அத்தி   -   அஸ்திஸ்வரூபத்தையுடைய, நித்தம் -
நித்யமும், அனித்தம் - அனித்யமும், அவாச்சியம் -  அவாச்சியமும்,
ஒத்த  -  பொருந்திய,    வேற்றுமை  -  பின்னமும்,   ஒற்றுமை -
அபின்னமும்,   சூனியம் - சூன்யமுமாகிய,  இவை - இவைகளாறும்,
ஒன்றிய   தன்மையால்  -  ஒருபொருட்   டன்மையால் (அதாவது :
பொருந்திய     தன்மையால்,   ஸ்யாத்நித்யம்   ஸ்யாதநித்யமென்று
பாவிப்பதால்),  தத்துவம் - தத்துவமாகும், (அதாவது : ஸ்வரூபமாகும்
அல்லது      நிச்சயமாகும்     யாதாத்மியமாகும்),      ஆறும் -
இவைகளாறையும்   வேறேயென    வேண்டினால் - வேறு வேறாக,
(நித்தியமேவ தத்துவம், அனித்யமேவ தத்துவம், அவாச்யமேவ தத்து