மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 295


 

 643. வினையினைச் செய்தலுந் துய்ந்த லும்மிலை
     நினைவது தோன்றிமீட் டுணர்வ தும்மிலை
     யினையதான் வேண்டிய விட்ட மாறொடு
     முனைதலுஞ் செயுநித்த முற்ற வேண்டினால்.

     (இ-ள்.)   நித்தம்  -  நித்தியத்துவத்தை,  முற்றவேண்டினால் -
முழுதும்   ஸர்வதா   ஸாதித்தால்,   வினையினை   - கருமங்களை,
செய்தலும்   -   செய்வதும்,      துய்த்தலும்   -    அதன்பலனை
யனுபவித்தலும்,    இலை - இல்லையாம்,   (அதாவது : இந்தக் கர்ம
பலஸம்பந்தேஷ்டம்    உண்டாகப்    பட்டதில்லை),    நினைவது -
ஞானமானது,     தோன்றி    -    உண்டாகி,  மீட்டு - திரும்பவும்,
உணர்வதும்    -    அறிவதுமாகிய தன்மை, இலை - இல்லையாம் -
(அதாவது :   இந்த   ப்ரத்தியபிஜ்ஞானேஷ்டமும் உண்டாவதில்லை),
இனையதான்   -   இத்தன்மையானவைகள், (வேதத்தில்), வேண்டிய
- இச்சிக்கப்பட்ட,    இட்டமாறொடும் - இந்த ஆறு இஷ்டங்களோடு,
முனைதலும்    செய்யும்   - (ஸர்வதா நித்தியமானால்) மாறுபடலைச்
செய்யும்,    (ஆகையால்    ஸ்யாதனித்தியமே     இஷ்டங்களுக்கு
அவிருத்தம்), எ-று.                                      (83)

 644. கடன்கொடுத் தான்கொளான் கொண்ட வன்கொடான்
     மடந்தைதன் சிறுவனும் வளர்ச்சி யெய்திடான்
     றொடங்கியே நூன்முடித் தோதி னான்சொலான்
     றிடம்பொரு ளெனிற்றிட்ட மூன்று மாறெய்தும்.

     (இ-ள்.)   கடன்    கொடுத்தான்   -   இவ்வுலகத்தில் கடன்
கொடுத்தவன்,    கொளான்   -    கொடுத்தகடனை    மறுபடியும்
வாங்கமாட்டான்,    கொண்டவன் - வாங்கிக்கொண்டவன், கொடான்
- மறுபடி     கொடுக்கமாட்டான்,    (அதாவது :  லோக ப்ரவர்த்தி
திருஷ்டத்திற்கு மாறுபடும்),  மடந்தை தன் சிறுவனும் -  ஸ்த்ரீயினால்
பெறப்பட்ட    அவளது    பாலகனும்,      வளர்ச்சியெய்திடான் -
வளரமாட்டான்,    (அதாவது :    புருஷப்ரவர்த்தி  திருஷ்டத்திற்கு
மாறுபடும்),    நூல்    -    ஒரு     சாஸ்திரத்தை,   தொடங்கி -
சொல்லத்தொடங்கி,    முடித்தோதினான்  -   முழுமையும் முடித்து
ஓதியவனாக,    சொலான்   -   சொல்லமாட்டான்,    (அதாவது :
சாஸ்திரப்ரவர்த்தி    திருஷ்ட   விருத்தம்), பொருள் தத்துவமானது,
திடமெனில்  -  ஸர்வதா  நித்தியமென்று சொன்னால், திட்டமூன்றும்
- இந்த   திருஷ்டங்கள்   மூன்றும்,   மாறெய்தும்  -  மாறுபாட்டை
யடையும்,   (ஆகையால்    திருஷ்ட   விருத்தமாகா தத்துவம்  ஒரு
பிரகாரத்தால்   நித்யமென்பதும்   மற்றொரு பிரகாரத்தால் அனித்திய
மென்பதுமாகிய ஸ்யாத்வாதம் பெறப்படும்), எ-று.              (84)

 645. தன்சொல்மா றாகிமேற் கோள ழிந்ததன்
     பின்பிறன் கோள்பிடித் திட்ட திட்டமா