(இ-ள்.)
கணங் கணந் தோறும் - சமயஞ் சமயந்தோறும்,
தோற்றமும் - நூதனமாக வுண்டாவதும் (அதாவது : உத்பாதமும்,)
கேடும் - (அப்படி உத்பாதமானது
தத்சமயத்திலேயே)
நாசத்தையடைவதும் (அதாவது : வியமும்),
ஆய் - இப்படி
உத்பாதவியமாகி, தணந்ததே - சேர்ந்ததே, தத்துவம்
- ஸர்வதா
அனித்திய தத்துவமாகும், நிலை - த்ரௌவ்யயுக்தமான
நிலை,
இல்லெயெனில் - ஸர்வதா இல்லையென்று
சொன்னால்,
கணங்கணந்தோறும் - சமயஞ்சமயந்தோறும்,
கெட்டவன் -
வ்யயமானவன், கேட்டினை -
அப்படிச் சமயம் சமயம்
நூதனமாகத்தோன்றி வியமான நாசத்தை, உணர்ந்து
- ஒருவன்
அறிந்து, சொல்லுமோ - சொல்லுவானோ?
இல்லையோ -
சொல்லமாட்டானோ?, உண்டு - சொல்லப்பட்டவனுண்டு, எனில் -
என்று சொல்லுமிடத்தில், எ-று. (87)
648. அவிந்த வவ்விளக் கேயிரு ளைக்கெடச்
சிவந்து நின்றெரி யும்மெனச் செப்பினா
னிவந்து நின்றொரு வன்சொலு மொன்றிடி
லுவந்த னித்தமு நித்தமு மொட்டினான்.
(இ-ள்.) அவிந்த
- அவிந்துபோகப்பட்ட, அவ்விளக்கே -
அந்தத் தீபமே, இருளை - அந்தகாரத்தை, கெட - சிறிது நேரம்
-
நீங்கும்படியாக, சிவந்து நின்று - சிவப்பாகியிருந்து,
எரியும் -
பிரகாசிக்கும், என - என்று, செப்பினான்
- திருஷ்டாந்தம்
சொல்லப்பட்டவனாகி, நிவந்து நின்று, அதுபோலப்
பிரகாசித்து
நிமிர்ந்து நின்று, ஒருவன் -
நாசத்தையடையப்பட்ட ஒருவன்,
சொலும் - சொல்லுவான், என்றிடில் - என்று சொன்னால், உவந்து
- மகிழ்ந்து, அனித்தமும் - அனித்தியத்தையும்,
நித்தமும் -
நித்தியத்தையும், ஒட்டினான் - சேர்ந்தவனாகும், எ-று.
(88)
649. மாய்ந்த வன்கண்ட வப்பொரு ளும்மனத்
தாய்ந்து தோன்று மவன்சொலு மென்றிடின்
மாய்ந்த னந்தர் மனத்தெப் பொருளையு
மாய்ந்து சொல்லுவ தாவது மாகுமே.
(இ-ள்.)
(அப்படி நின்று உணர்ந்து சொல்லும் ஒருவனில்லை)
மாய்ந்தவன் - பிரதம ஸமயத்தில் நாசமாகப்பட்டவன்,
கண்ட -
அறிந்த, அப்பொருளும் - அந்தப் பொருளையும், மனத்து - மனதில்,
தோன்று மவன் - பின் சமயத்தில்
உண்டாபவன், ஆய்ந்து -
ஆராய்ந்து, சொலும் - சொல்லுவான், என்றிடில் - என்றால், மாய்ந்த
- அதற்குமுன் அனாதியாகவே நாசமாகப்பட்ட, அனந்தர் - அனந்தம்
பேர்களுடைய, எப்பொருளையும் - எல்லாக்காரியங்களையும், மனத்து
- மனதில், ஆய்ந்து - தத்சமய வர்த்தியாயவன்
ஆராய்ந்து,
சொல்லுவதாவது - சொல்லுகின்றதாவதும், ஆகும்
- முடியும்,
(அப்படிக்குக் |