298மேருமந்தர புராணம்  


 

கூடாமையால் பிரத்தியக்ஷ   விரோதமும், அப்படிக் கூடுமானால், அது
நித்திய ஸ்வரூபமுமாகும்) எ-று.                             (89)

 650. சித்த முன்னதும் பின்னதுந் தத்தமி
     லத்தி யந்தம்வே றாகுறிற் சொன்னதா
     மத்தி யந்தம்வே றல்லவே யாய்விடி
     னித்த மொட்டினா னின்றதொன் றுண்மையால்.

     (இ-ள்.)   சித்தம் - மனவெண்ணம், முன்னதும் - முன் சமயத்து
நின்றவனதும்,  பின்னதும்   -   மறுஸமயத்தில்   தோன்றியவனதும்,
தத்தம்மில்   -   தங்கள்   தங்களுக்குள்,   அத்தியந்தம் - மிகவும்,
வேறாகுறில்   -   ஒன்றுக்கொன்று  வித்தியாசமானால்,  சொன்னது -
ஸர்வதா அநித்தியமென்று சொன்னது,   ஆம் - ஆகும், அத்தியந்தம்
- மிகவும்,    வேறல்லவேயாய்விடின்   -   வித்தியாசப்படாதனவாய்
ஒத்திருந்தால்,     நின்ற     -     ஸ்திரமாகநின்றது,     ஒன்று -
த்ரௌவ்யயுக்தமாகிய ஒன்று,    உண்மையால் - இருக்கின்றபடியால்,
நித்தம்     -      நித்தியத்தையும்,     ஒட்டினான்   -   (அவன்)
பொருந்தினவனாகும், எ-று.                                (90)

 651. அறிவ னாங்கிரண் டும்மறி யும்மெனி
     லறிவ னாமவன் யார்கொ லறிந்திலோம்
     நெறியி னாற்றவஞ் செய்துநின் றோடியா
     னறிவ னென்றிடி லாங்கவ னில்லையே.

     (இ-ள்.)  அறிவன் - ஞானியானவன், ஆங்கிரண்டும் - அப்படி
முன் ஸமயம் பின் ஸமயமாகிய விரண்டின் காரியத்தையும், அறியும் -
தெரிந்துகொள்ளும், எனில் - என்று சொல்லுமிடத்தில், அறிவனாமவன்
- அப்படி    ஞானியாக்கப்பட்டவன்,   (க்ஷணவிநாச  ஸ்வரூபமாகிய
ஸர்வதா    அனித்தியதத்துவத்தில்),   யார்   கொல்   -  எவரோ?,
அறிந்திலோம்   -   தெரிந்திலோம்,   நெறியினால்,   கிரமத்தினால்,
தவஞ்செய்து - தபத்தை செய்து, நின்று - த்ரௌவ்யயுக்தமாகி நின்று,
ஓடியான் - நீடித்திருப்பவன்,   அறிவன் - ஞானியாகும், என்றிடில் -
என்று சொல்லுமிடத்தில்,  ஆங்கவன் - அப்படி நித்தியமாயுள்ளவன்,
இல்லை - அத்தத்துவத்தில் இல்லை, எ-று.                   (91)

 652. வாரி யோட்டில் வலாகரித் திட்டபோற்
     பார மீதைகள் பத்தும் பயின்றவத்
     தார்வத் தோடு மறித்தறி வெய்திடி
     னேரி னித்தமு மொட்டின னாகுமே.