30மேருமந்தர புராணம்  


 

வென்று - ஜெயித்து, உயர்ந்த - ஸ்வாபவ குணங்களாலுயர்ந்த, கடவுள்
என்று    -    பகவான்    என்று,    அறையும்   -  தெரிவிக்கும்,
காமாதிவென்றுயர்ந்த     -    இராகாதிகளை   வென்று   உயர்ந்த
நிலைமையுடைய, கடவுளென்றறைந்தாலும் - கடவுள் இவர்தாம் என்று
அங்ஙனம் தெரிவித்தாலும்,  கோமான் - கோமானே,   நின் - உனது,
1திருவுருவம்  -  அழகிய ரூபத்தை, கொண்டு  -  மனத்துக்கொண்டு,
உவப்பார் - சந்தோஷித்துச் செல்கின்றவர்கள்,  அரியர் - அருமையா
யிராநின்றார்கள், எ-று.

     இதனால் ரூபஸ்தவம் சொல்லப்பட்டது.                  (64)

65. விளக்ககத்துப் பளிங்கேபோல் விரிந்தொளிமூன் றுடைமேனி
    யளப்பரிய யொளியகத்துள் ளிருப்பதென் றறையுமே
    யளப்பரிய வொளியகத்துள் ளிருப்பதென் றறைந்தாலுந்
    துளக்கறவென் றுயர்ந்தோயைத் தொழுதெழுவா ரரியரே.

     (இ-ள்)  விளக்கு  -  தீபத்தை,  அகத்து - உள்ளே  உடைய,
பளிங்கேபோல்  -  ஸ்படிகத்தைப்போல்,  விரிந்து - விசாலித்து, ஒளி
மூன்றுடை - (மனோஜோதி,  வாக்ஜோதி, காயஜோதி என்னும்) மூன்று
ஜோதிகளையுடைய,   மேனி  -  (உமது)  பரம  ஒளதாரிக  திவ்விய
சரீரமானது, அளப்பரிய - (பிறர்களால்) அளவிடுதற்கரியதாகிய, ஒளி -
பிரகாசமானது,   அகத்துள்   -   தனக்குள்ளே,    இருப்பதென்று -
இருக்கிறதென்று,  அறையும் - தெரிவியாநின்றது, அளப்பரியவொளி -
மிகுதியான     ஒளி,     அகத்துள்ளிருப்ப     தென்றறைந்தாலும் -
தன்னுக்குள்ளே   இருக்கிறதென்று    தெரிவித்தாலும்,    துளக்கற -
சலனமின்றி,   வென்று - விபாவங்களைக்கெடுத்து,   உயர்ந்தோயை -
ஸ்வபாவகுணத்தால் உயர்ந்த உன்னை,  தொழுதெழுவார் - வணங்கிச்
செல்பவர்கள், அரியர் - அருமையா யிராநின்றார்கள், எ-று.

     இதனால் வஸ்து ஸ்தவம் சொல்லப்பட்டது.               (65)

 66. அமலமா யருள்சுரந்திட் டறிவரிய திருமூர்த்தி
    விமலமாய்விரிந்தநாற் குணத்தலைமை விரிக்குமே
    விமலமாய் விரிந்தநாற் குணத்தலைமை விரித்தாலுங்
    கமலமீ துலவுமுனைக் காதலிப்பா ரரியரே.

     (இ-ள்)   அமலமாய்  -  நிர்மலமாகி  (அதாவது விபாவமின்றி),
அருள்சுரந்திட்டு    -   தயவை    சகலப்     பிராணிகளிடத்திலும்
அதிகரிக்கச்செய்து,    அறிவரிய    -    பிறர்களாலறிதற்கரியதாகிய,
திருமூர்த்தி - அழகிய பரமௌதாரிக திவ்விய தேகமானது, விமலமாய்
- குற்றமின்றி, விரிந்த - தன்னுக்குள் விசாலித்த, நாற்குணத்தலைமை -
(அனந்த  ஞான,  தர்சன,  சுக, வீர்யமென்னும்) நான்கு  குணங்களின்
முதன்மையை,  விரிக்கும்  -  விசாலித்துத்  தெரிவிக்கும்,  விமலமாய்
விரிந்த - அப்

___________________________________________

1திருவுருவம் - நிர்க்கந்தரூபம், அதாவது : பரிக்கிரகாஹிதரூபம்.