பெற்று மறு ஜன்மத்தில் கௌதமபுத்தனாக
அவதரித்தான் - என்று
சொல்லியிருப்பதையும் காண்க.
(Buddhist Birth Stories
or Jataka Tales translated by T. W. Rhys Davids.)
வலாகம் என்பது
அம் - விகுதி குறைந்து வலாகு என
நின்றது. (92)
653. வெந்த ஒட்டில் விழுந்தவத் துள்ளிபோல்
வந்த பாவனை யோடவன் மாயுமேல்
மைந்து போனவ னல்லன்மற் றார்கொலோ
பந்த மொன்றிலாப் பாழ்முத்தி நாதனே.
(இ-ள்.) வெந்த
ஓட்டில் - அக்கினியில் காய்ந்த ஓட்டில்,
விழுந்த - வீழ்ந்ததாகிய, அத்துள்ளிபோல்
- அந்த நீர்த்
துளியைப்போல், வந்த - வரப்பட்ட (அல்லது)
உண்டாகிய,
பாவனையோடு - பரிணாமத்தோடு, அவன் -
அவ்வொருவன்,
மாயுமேல் - அக்ஷணத்தில் நாசமாவானேயானால், மைந்துபோனவன்
- ஒரு வலி பெற்றாகிலும் அல்லது மயக்கமுற்றாகிலும்
மாய்ந்து
போனவன், அல்லன் - அல்லாதவனாகும்,
(ஆகையினால்),
பந்தமொன்றில்லா - யாதொரு பந்தமுமில்லாத, பாழ் -
பாழாகிய,
முத்தி - அவர்களால் சொல்லும் நிர்வாணத்திற்கு,
நாதன் -
உரித்தானவன், யார்கொல் - எவனோ?, எ-று.
வலி
- அழகென்றேனும், அல்லது தெளிவென்றேனும்
பொருள்தரும். யார்கொல் என்பது - யார் கொலாம் என்றும்
சில
பிரதிகளில் பாட பேதமாகக் காணப்படும். (93)
654. ஆத லாலனித் தம்பிடித் தாத்தனாம்
போதி யானையும் போக வெறிந்தவ
ரோது நூல்களு மொட்டறக் கெட்டபின்
யாதி னானிலை யாமை நிறுத்துவார்.
(இ-ள்.) ஆதலால்
- ஆகையினால், (இந்த விரோதமெல்லாம்
அறியாமல்), அனித்தம் பிடித்து -
ஸர்வதாவனித்தியமே
தத்துவமென்றுறுதியாகப் பிடித்து, ஆத்தனாம் -
முக்கியனாகிய,
போதியானையும் - புத்தனாகிய விறைவனையும்,
போக -
அனித்தியமாகும்படி, எறிந்து - கெடுத்து,
அவர் - அந்த
க்ஷணவிநாசம் தத்துவமென்று சொல்பவர்களால்,
ஓதும் -
சொல்லப்பட்ட, நூல்களும் -
சாஸ்திரங்களும், ஒட்டற -
ஒட்டுதலின்றி முழுதும், கெட்டபின் - ஸர்வதா அனித்தியமானதால்
கெட்ட பிறகு, யாதினால் - எதனால், நிலையாமை - அனித்தியத்தை,
நிறுத்துவார் - ஸ்தாபிப்பார்கள், எ-று. (94)
|