வேறு.
655. நவ்வெனச் சொல்லினான் சொன்ன வந்நவு
மவ்வவக் கணத்திலே யழிந்து போதலால்
நவ்வையே நவ்வையே நவிற்றி னல்லது
மொவ்வினை யனித்தமென் பார்கள் மூட்டிடார்.
(இ-ள்.) நவ்வெனச் சொல்லினான்
- ஸர்வதா அனித்தியமென்றே
தத்துவத்தை ஸாதிப்பவர்கள் நமோவென்று சொல்லவேண்டி அதன்
பிரதம அக்ஷரமாகிய நகரத்தை நவ்வென்று சொன்னவனும், சொன்ன -
அவனாற் சொல்லப்பட்ட, அந்நவும் -
அந்த நகரமும்,
அவ்வக்கணத்திலே - அந்தந்த ஸமயத்திலே, அழிந்துபோதலால் -
ஸர்வதா அனித்தியத்தால் நாசமாவதால், அனித்தியமென்பார்கள்
-
அனித்தியமென்னும் அந்த அனித்தியவாதிகள், நவ்வையே நவ்வையே
- நகரத்தையே நகரத்தையே, நவிற்றினல்லது - சொல்வதேயல்லாமல்,
மொவ்வினை - மோவென்னுமக்ஷரத்தை, மூட்டிட்டார்
- சொல்ல
முடியாதவர்களாக அத்தத்து வத்தாலாகா நின்றார்கள், எ-று. (95)
656. வாசத்தைப் போல்வமென்னின் மாமலர்
நாசத்தைச் செலாதமுன் னண்ணு மொட்டிடை
வாசத்தை வைத்துப்பின் மாயு மாறுபோல்
பேசிற்றுண் டோபிறி தோடு நிற்கவே.
(இ-ள்.) வாசத்தைப்போல்
- வாசனைபோல, (அதாவது :
மலர்ந்த புஷ்பமானது மாய்ந்துபோனால் அந்தப்
புஷ்பத்தினது
வாசனையானது மறுபடி உண்டாகி மலர்கின்ற
புஷ்பத்திற்கு
வருவதுபோல்), வரும் - முதற் சமயத்தில் நகரத்தைச் சொன்னவன்
மாய்ந்துபோக அந்த வாசனையறிந்து மோகாரத்தைச் சொல்பவன்
பிறக்கும், என்னின் - என்றால், மாமலர் - மலர்ந்த
புஷ்பமானது,
நாசத்தைச் செலாத முன் - நாசமடையாததற்கு முன்னமே, நண்ணும்
- பக்கத்தில் சேர்ந்திரா, நின்ற, மொட்டிடை -
மொக்கினிடத்தில்,
வாசத்தை - தனது வாசனையைப்போன்ற வாசனையை, வைத்து -
ஸ்தாபித்து, பின் - பிறகு, மாயு மாறுபோல் - நாசமடைவதுபோல்,
பிறிதோடு - நூதனமாகப் பிறக்கும் வேறொருவனோடு, பேசிற்று
-
பேசப்பட்டது, உண்டோ - உண்டாகுமோ?, நிற்க
- இது நிற்க,
எ-று.
(96)
657. முற்கணத் துரைத்தவன் முடிந்த போழ்தினிற்
பிற்கணத் துரைப்பவன் பிறக்கு மென்றலான்
முற்கணத் தவனொடு பிற்க ணத்தவ
னிற்குமென் றுரைத்திடி னித்த மாகுமே. |