302மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)   முற்கணத்து  -  அதீத  ஸமயத்தில், உரைத்தவன் -
சொன்னவன்,   முடிந்த    போழ்தினில்   -   நாசமடைந்த போதே,
பிற்கணத்து   -   பவிஷ்யத்   ஸமயத்தில், உரைப்பவன் - அதறிந்து
சொல்பவன்,   பிறக்கும்   -    பிறப்பான்,    என்றலால்  -  என்று
சொல்வதினால்,   முற்கணத்தவனொடு   -   ப்ரதஸமயவர்த்தியோடு,
பிற்கணத்தவன்    -   உத்தரஸமயவர்த்தியாபவன்,   நிற்குமென்று -
நிற்பானென்று,    உரைத்திடில்   -  சொல்லுமிடத்தில், நித்தமாகும் -
நித்தியமுமாகப்பட்டதாக நின்றது, எ-று.                      (97)

 658. நல்வினைச் செயநினைத் தான்செ யான்பினை
     யவ்வினைச் செய்தவ னதன்ப யன்றுவா
     னிவ்வகை யனித்தமே யென்று ரைப்பவர்
     செய்யுநல் வினைகளும் பயனு மில்லையே.

     (இ-ள்.)  நல்வினை - நன்மையாகிய புண்ணிய வினையை, செய
- முன்    ஸமயத்தில்    செய்ய   வேண்டுமென்று,  நினைத்தான் -
நினைத்தவன்,  செயான் - அந்நல்வினையைச் செய்யமாட்டான், பினை
- பின் ஸமயத்தில், அவ்வினை - அப்புண்ணிய வினையை, செய்தவன்
- இயற்றியவன்,   அதன்  பயன் - அப்புண்ணிய வினையின் பலனை,
துவான்  -  அனுபவிக்கமாட்டான்,   இவ்வகை - இந்தப் பிரகாரமாக,
அனித்தமே  யென்று  -  ஸர்வதா அனித்தியமே தத்துவமாகுமென்று,
உரைப்பவர் - சொல்பவர்கள்,   செயும் - செய்கின்ற, நல்வினைகளும்
- புண்ணிய     வினைகளும்,    பயனுமில்லை    -   அவைகளின்
பலனுமில்லாமல் போகும், எ-று.                            (98)

 659. மறித்தது விதுவென வுணரு மவ்வுணர்
     வறக்கெடு மனித்தத்து ளில்லை யாமெனி
     லறக்கெட வேற்றின விளக்கை யஃதெனு
     மறித்துணர் வுணர்வதும் மயக்க மாகுமே.

     (இ-ள்.)   மறித்து   -   திரும்பி, அது - அந்த வஸ்துவானது,
இதுவென  -  இதுதான்   என்று,   உணரும்  -  அறியும்படியாகிய,
அவ்வுணர்வு  -  அந்தப்   பிரத்திய பிஜ்ஞானமானது, அறக்கெடும் -
ஸர்வதா  நாசமடைகின்ற,  அனித்தத்துள்  - அனித்திய தத்துவத்தில்,
இல்லையாம்   -   இல்லாததாகும்,  எனில் - என்றால், அறக்கெட -
இருளானது  பற்றற நீங்கும்படியாக, ஏற்றின - ஏற்றப்பட்ட, விளக்கை
- தீபத்தை,  அஃதெனும் - அதுதானென்கின்ற, உணர்வு  - அறிவால்,
மறித்து - திரும்பவும்,   உணர்வதும் - அறிகின்றதும், மயக்கமாகும் -
பிராந்தமாகும், எ-று.                                     (99)

 660. தவ்வியந் தேசமே கால பாவமென்
     றவ்வியம் பிடித்தந்த விளக்கி தென்றெழு