மெவ்வகை யுங்கெடி னிதுவ தென்றெழு
மவ்வது மிதுவென்பே ரறிவு மில்லையே.
(இ-ள்.) தவ்வியம் - திரவியமும்,
தேசம் - க்ஷேத்திரமும், காலம்
- காலமும், பாவமென்று - அத்திரவ்யத்தினுடைய பாவமும் என்று,
(இந்நான்கினால்), அவ்வியம் - அழியாத தன்மையாகிய த்ரௌவ்ய
யுக்த தன்மையை, பிடித்து - சேர்ந்து, அந்த விளக்கு
- அந்தத்
தீபமானது, இதென்று - இதுதானாகுமென்று, எழும் - உண்டாகின்ற,
(பிரத்தியபிஜ்ஞானமானது), எவ்வகையும் -
ஸர்வதா, கெடின் -
நாசமடைந்து அனித்தியமானால், எழும் - உண்டாகின்ற, அவ்வதும் -
இந்த நிச்சய ஸ்வரூபமும், இதுவின் பேர்
- இப்பொருளினுடைய
பெயரும், அறிவும் - (இவற்றின் தன்மைகளை அறியும் சக்தியாகிய),
பிரத்தியபிஜ்ஞான ஸ்வரூபமும், இல்லை - அத்தத்துவத்தாலில்லை,
எ.று. (100)
661. அன்றுநாம் பிரிந்தன மடிக டாமிவ
ரின்றுவந் தாரென வுரைத்தி யாவருஞ்
சென்றறிந் திறைஞ்சுவ தெவ்வ றிவினா
லொன்றுநின் றிடாவகை யுரைக்கு நூலினார்.
(இ-ள்.) ஒன்று நின்றிடாவகை
- ஸர்வதாவனித்யஸ்வரூபத்தை,
உரைக்கும் - சொல்லும், நூலினார் - சாஸ்திரத்தையுடையவர்கள்,
அன்று - அந்நாளில், நாம் - நாம், பிரிந்தனம்
- இவரை விட்டு
நீங்கினோம், அடிகள் தாம் - அந்தக் குருக்கள்
தாம், இவர் -
இவராகும், இன்று - இப்பொழுது, வந்தார்
- இவ்விடத்தில்
வந்தார்கள், என - என்று, உரைத்து -
சொல்லி, யாவரும் -
எவர்களும், சென்று - அவரிடம் சென்று, அறிந்து - அவர்தானென்று
அறிந்து, இறைஞ்சுவது - வணங்குவதானது, எவ்வறிவினால் - எந்த
ஞானத்தினால்?, எ-று. (101)
வேறு.
662. முன்னைக் கணத்தி னிறந்தவனும் முடிந்த கணத்து நின்றவனும்
பின்னைக் கணத்துப் பிறப்பவனும் பிறிது பிறிதே யுறவில்லை
யென்னிற் றடுமாற் றதுவில்லை யிவற்றைக் கொண்டு விடுமொருவன்
றன்னைக் காணோ மாதலினுந் தடுமாற் றவர்க்குத் தடுமாற்றே.
(இ-ள்.) முன்னைக்கணத்தின்
- பூதசமயத்தில், இறந்தவனும் -
நாசமடைந்தவனும், முடிந்த கணத்து - வர்த்தமான
சமயத்தில்,
நின்றவனும் - இருந்தவனும், பின்னைக்கணத்து
- பவிஷ்யத்
ஸமயத்தில், பிறப்பவனும் - பிறக்கின்றவனும், பிறிது பிறிதே - வேறு
வேறே, உறவில்லை - ஒருவருக் கொருவர் பந்த |