304மேருமந்தர புராணம்  


 

மில்லை,    என்னில்  -  என்று   சொல்லுமிடத்தில்,   தடுமாற்றது -
ஸம்ஸாரமானது,   இல்லை - உண்டாவதில்லை, இவற்றைக்கொண்டு -
இந்த   ஸம்சாரத்தில்   பிறந்து,  விடும்  - கருமங்களை நீக்கிவிடும்,
ஒருவன்   தன்னை   -   ஒரு நித்தியமான ஆத்மனை, காணோம் -
அவ்வனித்ய  தத்துவத்தில் காண்கிலோம், ஆதலின் - ஆகையினால்,
(இப்படி     ஸர்வதாவநித்திய     தத்துவஞ்     சொல்லுவர்களாகி),
தடுமாற்றவர்க்கு  -  இப்படித் தடுமாறப்பட்டவர்களுக்கு, தடுமாற்றே -
இச்சம்ஸாரப்பிரமணமே, (அதாவது : மோக்ஷமில்லை), எ-று.

     உம் - அசை.                                     (102)

 663. தானஞ் சீலந் தவந்தருமந் தயாக்க டம்மாற் றடுமாற்றில்
     வானின் மண்ணிற் பிறந்திறந்து வந்து வீடு பெறுமொருவன்
     றானங் கிலனென் பாரவர்க்குத் தடுமாற் றறுத்து வீட்டினைப்பெற்
     றானென் றால்சொற் பொருளின்றே லாரோ வீடு பெறுவாரே.

     (இ-ள்.)  தடுமாற்றில்  -  இச்சம்ஸாரத்தில், தானம் - தானமும்,
சீலம் - சீலமும்,  தவம் - தபமும், தருமம் - தருமங்களும், தயாக்கள்
தம்மால்  -  ஜீவதயவு  முதலாகிய   காருண்யாதிகளாகிய  இவற்றால்
(அதாவது : தானஞ் செய்வதாலும்,  சீலாச்சாரத்திற் பொருந்துவதாலும்,
தவஞ்செய்தலாலும்,   தர்மங்களிற்    பொருந்துவதாலும்,   ஜீவதயை
முதலியவற்றைச்    செய்வதாலும்),   வானில்  -  தேவலோகத்திலும்,
மண்ணில்  -  பூமியிலும்,   பிறந்து இறந்து - தோன்றியும் மறைந்தும்,
(அதாவது :  தேவவுலகிற்றோன்றி   அப்யுதபலனனுபவித்து நீங்கியும்,
மண்ணுலகில்   மனுஷ்ய   க்ஷேத்திரத்தில்    தர்ம   கண்டங்களில்
உச்சைர்வம்   சோத்பூத  மனுஷ்யனா யவதரித்து நீங்கியும்),  வந்து -
தக்கபவரும் வந்து, வீடுபெறும் - கர்மக்ஷயஞ் செய்து  முக்தியடையும்,
ஒருவன்தான்   -   ஒரு  ஆத்மனானவன்தான்,  அங்கு - அனான்ம
வாதமாகிய அந்த க்ஷணிகேகாந்த வாதவனித்திய தத்துவத்தில், இலன்
- இல்லாதவனாகும்,     என்பார்    -    என்று   க்ஷணவிநாசமும்
அனான்மையும்     சொல்லுபவராகிய,    அவர்க்கு   -     அந்த
க்ஷணிகவாதிகட்கு,  தடுமாற்று - இச்சம்சாரத்தை, அறுத்து - ஒருவன்
கெடுத்து,   வீட்டினை  -  மோட்சத்தை, பெற்றான்  - அடைந்தான்,
என்றால் - என்று சொன்னால்,   சொல்ல  - அப்படிப்பட்ட வசனம்,
பொருள் - தன்னால்   குறிக்கப்பட்ட அவ்விதமான  நித்யப்பொருள்,
இன்றேல் - அத்தத்துவத்தி  வில்லையானால்,  (அந்த வசனத்திற்குப்
பொருள் இல்லையாகையால்),   வீடுபெறுவார் - அத்தத்துவ வறிவால்
மோட்சமடைவோர்கள்,   யார்   -   எவர்கள்?, (ஒருவருமடையார்),
எ-று.                                                 (103)

 664. எல்லா வகையுங் கெட்டுள்ளத் தில்ல தந்தக் கணத்துதித்து
     வல்லே வருமிச் சந்தானம் முடியுங் கணத்து வந்ததற்கோ