குணகுணித் தன்மை
யன்றிக் குழுவலும் பிரிவு மாகு
முணாந்திடா துயிரி னிற்கு மொரோவழிக் குணியு மன்றாம்.
(இ-ள்.)
குணகுணி - குணமும் அந்தக் குணத்தையுடைய
பொருளும், வேறே யென்னில் -
ஸர்வதா பின்னமேவ என்று
சொல்லுமிடத்தில், கூடியமுடிவிற்றாகும் -
வேறாகவிருந்துபின்
அவ்விரண்டு மொன்றாகச் சேர்ந்து முடியப்
பட்டனவாகும்,
உணர்வொடு - ஞானத்தோடு, காட்சியாதி - தர்சனம்
முதலாகிய,
ஆத்ம குணங்கள், உயிரின் வேறுளவுமாகும் - ஆத்மனை விட்டு
வேறிடத்திலிருப்பனவுமாகும், குணம் - குணங்கள், குணித்தன்மையன்றி
- அந்தப் பொருள்களின் ஸ்வரூபமல்லாமல்,
குழுவலும் -
வேறேயிடத்திலும் கூடுவதும், பிரிவுமாகும்
- பிறகு அதனின்று
நீங்கிவிடுவதுமாகும், உயிரின் - ஆத்மனிடத்தில், உணர்ந்திடாது
-
(ஞானாதி குணங்கள் அல்லாத) அசேதன குணமும்,
நிற்கும் -
இருப்பதாகும், ஒரோவழி - இவ்விதத்தால் பார்க்குமிடத்தல் ஒருவழி,
குணியும் - குணத்தையுடையதாகிய யாதொரு பொருளும், அன்றாம் -
இல்லையென்றும் ஆகும், எ-று.
உணர்ந்திடாதது - என்பது,
உணர்ந்திடாது எனத்தொகுத்தலாய்
வந்தது. (111)
672. மயக்கமே செற்ற மார்வ மாம்பந்த கார ணங்க
ளுயிர்ப்பரி ணாம மின்றி யொழியப்போய்க் கட்டும்
வீடுங்
கயக்கமி னிலையிற் றாகிக் கயத்திடைக் கல்லுப்
போலாம்
வியப்புறு தவத்தி னாலென் பெறுவது வேறென் பாரேல்.
(இ-ள்.) வேறென்பாரேல்
- குணகுணிகள் ஸர்வதா பின்னமேவ
என்று சொல்வார்களேயானால், மயக்கம் - மோகமும்,
செற்றம் -
த்வேஷமும், ஆர்வம் - ஆசையும், ஆம் - ஆகிய, பந்த காரணங்கள்
- கர்ம பந்தத்துக்குக் காரணமான ராகத்வேவு மோஹங்கள், உயிர் -
ஆத்மனுடைய, பரிணாமமின்றி - பரிணதகுணமில்லாமல்,
ஒழிய -
நீங்க, கட்டும் - பந்தமும், வீடும் - மோட்சமும்,
போய் - நீங்கி,
கயக்கமில் -
சோர்வில்லாத, நிலையிற்றாகி -
நிலையினையுடையனவாய், கயத்திடை - குளத்திலிருக்கப்பட்ட,
கல்லுப்போல் - கல்லைப்போல, ஆம் - ஆகும், (அப்படியிருக்க),
வியப்புறும் - விஸ்மய மடையும்படியான, தவத்தினால் - தபம் முதலிய
வைகள் செய்தலால், என் பெறுவது - பந்தமோட்சங்களில்லையாகில்
எதையடைவது (அடைவது ஒன்றுமில்லை), எ-று. (112)
673. உடம்பினு ளுயிரைப் போல குணகுணி யொன்றோ டொன்று
விடும்படிக் கண்ட துண்டேல் வேறென விளம்ப லாகும்
சடம்புரிந் துரைவே றாகப் பொருளும்வே றாமென் பானேல்
மடந்தைபெண் மாதென் றாலும் மகளலாப் பொருளு முண்டோ. |