314மேருமந்தர புராணம்  


 

 678. ஒன்றென வுரைக்கும் மாரி தீவெயிற் கொதுங்கு மோடித்
     தின்றிடா மண்ணைச் சோறு தேடியே பசித்து றங்கு
     மென்றிடா விரண்டு ரைக்கு மென்னைப்போல் பார்க்கி லெல்லா
     மொன்றென வுரைக்கும் வாயே யுன்மத்தச் சரித மாய்த்தே.

     (இ-ள்.)   (மேற்கூறியபடி  ஒன்றென வுரைப்பவன்) ஒன்றென -
ஸர்வதா   அபின்னமென்று,   உரைக்கும்  -  சொல்வான், மாரிக்கு -
மழைக்கும்,  தீக்கு - அக்கினிக்கும், வெயிற்கு - வெயிலுக்கும், ஓடி -
நீங்கிச்சென்று,   ஒதுங்கும்   -   மறைவான்,  (எல்லாம் ஒன்றானால்
ஏனப்படிச்   செய்யவேண்டும்?   வேண்டியதில்லை; அது பிரத்தியக்ஷ
விரோதம்;  அதுவல்லாமலும்),   மண்ணை   - மண்ணை, தின்றிடா -
தின்னாமல்,   சோறு   -    சோற்றை,    தேடி - சம்பாதித்து, (அது
கிடைப்பது   அரிதானால்),   பசித்து  - பசியால் வருந்தி, உறங்கும் -
தூங்குவான்,  (எல்லாம் ஒன்றானால் ஏன் அப்படி அலையவேண்டும்?
அதுவும்  முன்சொன்னது போலவேயாகவேண்டும்), என்றிடா - என்று
இவைகளையெல்லாம்   விவரமாகத்   தெரிவித்து, இரண்டுரைக்கும் -
கதஞ்சித்பின்னம்   கதஞ்சித்  அபின்னமென்று  சொல்கின்ற இரண்டு
வசனங்கட்கும்   (உள்ளதை),  என்னைப்போல்  -  என்னைப் போல,
பார்க்கில் - பார்க்குமிடத்தில், எல்லாம் - யாவும் (எப்பிரகாரத்தாலும்),
ஒன்றென - அபின்னமே  என்று, உரைக்கும் - சொல்கின்ற, வாயே -
வசனமானது, உன்மத்த  சரிதமாய்த்து  -  மயங்கிய  நடவடிக்கையாக
விராநின்றது, எ-று.

     குவ்வுருபு மூன்றிடத்துங் கூட்டப்பட்டது.                (118)

வேறு.

 679. விண்மதி யெண்ணிலா மண்ண கற்களி
     னுண்ணிலா நீரகத் துருவு போலவுங்
     கண்ணுறு கடந்தொறா காயம் போலவு
     மெண்ணிலாக் காயத்து ளுயிறா மொன்றெனில்.

     (இ-ள்.)    எண்ணிலா     -     கணக்கில்லாத  (அதாவது :
அஸங்கியாதமாகிய), மண்  அகல்களின் - மட்பாத்திரங்களின், உள் -
உள்ளேயிருந்து,   நிலா   -   பிரகாசிக்கும்படியான,      நீரகத்து -
ஜலத்தினுள்ளே,  விண்மதி - ஆகாயத்திலிருக்கின்ற சந்திரனது, உருவு
போலவும்   -   ரூபம்  போலவும்,  கண்ணுறு - கருதப்பட்டிருக்கிற,
கடந்தொறும் - பாத்திரங்கள் பாத்திரங்கள் தோறும்,  (தோன்றுகின்ற),
ஆகாயம்   போலவும்   -   ஆகாயத்தைப் போலவும், எண்ணிலா -
கணக்கில்லாத,   காயத்துள்  -  சரீரத்துக்குள், உயிரும் - ஆத்மனும்,
ஒன்றெனில் - ஒன்றே யென்று சொல்லுமிடத்தில், எ-று.         (119)