மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 315


 

 680. சாயைக்குத் தன்மைதா னெங்கு மொத்தபோ
     லாயுநல் லறிவின்ப துன்ப மாதிகள்
     காயத்து ளுயிர்களுக் கெங்கு மொத்திடி
     லேயு மன்றியொன் றாதிவ் வெடுத்துரை.

     (இ-ள்.)   சாயைக்கு - அந்தச்  சந்திரனுைடைய  சாயலுக்கு,
தன்மைதான் - ஸ்வபாவமானது, எங்கும் எவ்விடத்தும்,  (அதாவது :
ஜலமுள்ள எப்பாத்திரங்களிலும்), ஒத்தபோல் - வித்தியாசமில்லாமல்
ஒத்திருப்பது   போல்,   காயத்துள்   -    சரீரத்துளிருக்கப்பட்ட,
உயிர்களுக்கு   - ஆன்மாக்களுக்கு, ஆயு - ஆயுஷ்யமும்,  நல் -
நன்மையாகிய,   அறிவு   -  ஞானமும், இன்பம்  - சௌக்கியமும்,
துன்பமாதிகள்    -    துக்கம்    முதலானவைகளும்,     எங்கும்
எவ்விடத்திலும்,  (அதாவது : எல்லாச் சரீரங்களிலும்),   ஒத்திடில் -
சமானமாயிருந்தால்,   இவ்வெடுத்துரை  - இத்திருஷ்டாந்தம்,  ஏயும்
- இசையும்,    அன்றி   -   அப்படிக்கில்லாமல்,   (வித்தியாசமாக
விருப்பதால்), ஒன்றாது - பொருந்தாது, எ-று.                (120)

வேறு.

 681. கார்து ளும்புங் கடத்துறுந் தீமையா
     லோர் துளும்புணர் லாதிக ளொத்தொவா
     நீர்து ளும்பநின் றம்மதிச் சாயையின்
     னேர்து ளும்புவ தெங்ஙன மென்றிடில்.

     (இ-ள்.)   கார்   -   நீரானது, துளும்பும் - சிற்சில கடங்களில்
காற்றினால்   அசையும்,   (அதனால்),  கடத்துறும் - சில கடங்களில்
மாத்திரம்   அவ்வசைதல்   ஏற்படும்,   (அதுபோல்), ஓர் - ஒப்பற்ற,
தீமையால்   -   ஏதோ    பொல்லாத    செய்கைகளால், துளும்ப -
ஒவ்வோரிடங்களி   லசைதலால்,   உணர்வாதிகள்  -  ஞான முதலிய
குணங்கள்,   ஒத்து   -   சிலவிடங்களில்   பொருந்தியும்,   ஒவா -
சிலவிடங்களில்   பொருந்தாதனவுமாகும்,    (என்னுமிடத்தில்),  நீர் -
ஜலமானது, துளும்ப - காற்றினாலசைய, நின்ற - ஆகாயத்திலிராநின்ற,
மதி - சந்திரனுடைய,   சாயையின்  -  சாயலினது, ஏர் - அழகானது,
எங்ஙனம்  -  எவ்விதமாக,   துளும்பும்  -  அசையும்? (அசையாது),
என்றிடில் - என்று சொன்னால், எ-று.

     துளும்புணர் என்பதில் அகரந்தொக்கது.                (121)

 682. இன்ப துன்ப முயிர்க்கல யாக்கைய
     வென்ப திந்த வெடுத்துரை யால்வரும்
     முன்செய் புண்ணிய பாவ முடித்ததற்
     பின்பி றத்த லிறத்தலு மில்லையே.