(இ-ள்.)
இன்பம் - சுகமும், துன்பம் - துக்கமும், உயிர்க்கல -
ஆத்மனுக்கில்லை, யாக்கையவென்பது - சரீரத்தினுடையன வென்பது,
இந்த எடுத்துரையால் - இத்திருஷ்டாந்தத்தால், வரும் - வராநின்ற,
(ஆகையால் யாதொரு ஜீவனும்), முன்
செய் - பூர்வத்தில்
செய்யப்பட்ட, புண்ணியம் -
புண்ணியத்தையோ, பாவம் -
பாவத்தையோ, முடித்து - அனுபவித்துத் தீர்த்து, அதற்பின் - அதன்
பிறகு, பிறத்தல் - மறுபடி பிறப்பதும், இறத்தலும் - மரணமடைவதும்,
இல்லை - இல்லை யாகும், எ-று. (122)
683. வாரி மேன்மதி நிற்பவச் சாயைதான்
நீரி னீங்குத லில்லையே னின்னுரை
யோரு மோருயிர் நிற்ப வுடம்புயிர்
பேர நீபிண மாகிப் பிழைத்ததே.
(இ-ள்.) வாரிமேல்
- கடத்திலுள்ள வச்சலத்தின்மேல்
ஆகாயத்தில், மதி - சந்திரன், நிற்ப - இருக்க, அச்சாயைதான்
-
அந்தச் சந்திரச்சாயலானது, நீரின்
- ஜலத்தினின்றும்,
நீங்குதலில்லையேல் - நீங்கப்பட்டதில்லையானால்,
நின்னுரை -
ஸர்வதா அபின்னமே சொல்லுகிற உன்னுடைய வசனமானது, ஓரும் -
அறிகின்ற, ஓருயிர் - சந்திரன்போல
பரமாத்மனென்கிற ஒரு
உயிரானது, நிற்ப - நீங்காமல் நிற்க,
உடம்புயிர் - சரீரத்துள்ள
சந்திரசாயைபோன்ற உயிரானது, போ - சரீரத்தினின்றும் நீங்க,
நீ
பிணமாகி - நீயென்னும் அச்சரீரம் பிரேதமாகி,
பிழைத்தது -
உன்னாற் சொல்லிய தத்துவத்தினின்றும் பிசகியதாகும், எ-று. (123)
684. இந்துவுஞ் சாயையும் போலி ரண்டுயிர்
நின்றன கண்டிலம் நிற்குங் காட்டிது
வன்றியுஞ் சாயைபோ லாமி ரண்டுயிர்
நின்றதுண் டாகிலும் நின்ற தில்லையே.
(இ-ள்.) இந்துவும் - சந்திரனையும்,
சாயையும் - நீரில் தோற்றும்
அச்சந்திரனது சாயலையும், போல் -
போல, இரண்டுயிர் -
இரண்டுயிர்கள், நின்றன - நின்றவைகளை, கண்டிலம் - பார்த்திலோம்,
இதுவன்றியும் - இது வல்லாமலும், சாயைபோல் - சாயலைப்போல,
ஆம் - இரண்டாகும் படியான, இரண்டுயிர்
- இரண்டுயிர்கள்,
நின்றதுண்டாகிலும் - இருக்குமானாலும்,
நிற்கும் - உன்
திருஷ்டாந்தத்தால் சாதிக்கப்பட்டிராநின்ற,
காட்டு -
தார்ஷ்டாந்தாகமாகிய அபின்ன தத்துவம்,
நின்றதில்லை -
நிலைக்கப்பட்டதில்லை, எ-று.
(124)
வேறு.
685. கடங்க டந்தொறா காயம தாயவா
றுடம்பு டம்புதோ றாமுயி ரொன்றெனில் |