மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 317


 

     கடந்த கர்ந்துழிக் காய நிலைக்குமா
     றுடம்பு டைந்துழி யும்முயிர் நிற்பதாம்.

     (இ-ள்.)   கடங்கடந்தொறும்   -   கடங்கள் கடங்கள்தோறும்,
ஆகாயமது    -   ஆகாசமானது,    ஆயவாறு  - ஆகியது போல்,
உடம்புடம்புதோறும் - எல்லாச்  சரீரங்களிலும், ஆம் - உண்டாகின்ற,
உயிர் - உயிரானது,   ஒன்றெனில் - ஒன்றேயென்று சொல்லுமிடத்தில்,
கடம்  -  கடமானது,   தகர்ந்துழி - உடைந்த  விடத்திலும், காயம் -
ஆகாயமானது,   நிலைக்குமாறு - நிலைத்திருப்பது  போல், உடம்பு -
சரீரம்,   உடைந்துழியும் - கெட்ட   விடத்திலும், உயிர் - உயிரானது,
நிற்பது   -   இருக்கவேண்டியதாக,   ஆம்   -   ஆகின்றது, (அது
பிரத்தியக்ஷத்திற்கு விரோதம்), எ-று.                        (125)

 686. குடத்து ளுங்குட மின்றி யிருந்தமற்
     றிடத்தி னுங்கவி னுக்கியல் பொத்தபோ
     லுடம்பு ளுமுடம் பின்றி யிருந்தவெவ்
     விடத்தி னுமுயி ரொத்திடல் வேண்டுமே.

     (இ-ள்.)  குடத்துளும்  -  கடத்திலேயும்,  குடம்  - கடமானது,
இன்றி   -   இல்லாமல்,   இருந்த - இருக்கப்பட்ட, மற்றிடத்தினும் -
மற்றெவ்விடங்களிலும்,     கவினுக்கு   -   ஆகாயத்திற்கு, இயல்பு -
ஸ்வபாவமானது,  ஒத்தபோல்  -   ஒத்திருப்பதுபோல், உடம்புளும் -
சரீரத்தினுள்ளும்,  உடம்பின்றியிருந்த   -  சரீரமில்லாமலிருக்கப்பட்ட,
எவ்விடத்தினும்   -   எவ்விடங்களிலும்,  உயிர் - ஜீவன்,  ஒத்திடல்
வேண்டும் - சமானமா யிருக்கவேண்டும், எ-று.               (126)

 687. உடம்பி னோடு முயிர்த் தொழி லாலுயி
     ருடம்பி னுண்மை யுணர்த்திடு மத்தொழி
     லடங்க லும்மில் லாவழி யாருயிர்
     தொடர்ந்து நின்றமை சொல்லுவ தென்கொலோ.

     (இ-ள்.)   உடம்பினோடும்   -    சரீரத்தோடு கூடிய, உயிர் -
ஆத்மனுடைய,  தொழிலால் -  சேதனத்தொழிலால், உயிர் - ஆத்மன்,
உடம்பின் - சரீரத்தில், உண்மை - இருக்குந்தன்மையை, உணர்த்திடும்
- தெரிவிக்கும்,  அத்தொழில்  -  அச்சேதனத்தொழில், அடங்கலும் -
முழுதிலும், இல்லாவழி  -  இல்லாவிடத்தில், ஆர் - நிறைந்திராநின்ற,
உயிர் - உயிரானது, தொடர்ந்து நின்றமை - எவ்விடங்களிலும் சேர்ந்து
நின்றதை, சொல்லுவது என்கொல் - எப்படிச் சொல்வது, எ-று.

    ஓ - ஈற்றசை.                                       (127)