688. உடம்பு தானுயிர் போயது முண்டெனி
னடந்த துன்னுரை ஞாலவி ரோதியா
முடம்பு தன்னள வாயுட னின்றுபின்
விடும்ப டித்துயி ரென்பது வீழ்ந்ததே.
(இ-ள்.) உடம்பு
தான் - சரீரமானது, போய் - நீங்கிப்போகி,
உயிர் அது - ஆத்மனானது, உண்டெனில் - இருக்குமேயாகில்,
உன்னுரை - உன்னாற் சொல்லப்பட்ட ஆத்மன் ஒன்றே யென்கிற
அபின்ன வாதம், நடந்தது - செல்வாக்கையடையப்பட்டது, (அப்படி
உடம்பு நீங்கிய உயிரை யாவரும் காண்பதில்லை; உயிர்
நீங்கிய
உடம்பு அதாவது : பிரேதம் உலகில் யாவராலும் திருஷ்ட
சுருத
அனுபோகமாய்க் காணப்படுகின்றது; ஆகையால்), உயிர் - உயிரானது,
உடம்பு தன்னளவாய் - சரீரப்பிரமாணமாய்,
உடனின்று -
சேர்ந்திருந்து, பின்
- பிறகு, விடும்படித்து
-
நீங்குந்தன்மையையுடையது, என்பது - என்கிறலோக
வசனம்,
வீழ்ந்தது - உன்னுடைய ஒன்றே என்கிற அபின்ன தத்துவத்தால்
கெடப்பட்டது, (அதனால் ஞாலவிரோதியாம் ஸர்வதா
ஆத்மன்
ஒன்றே யென்கிற அபின்னவாதம் இவ்வுலகத்தில்
பிரத்தியட்ச
விரோதமாயிருக்கிறது), எ-று. (128)
689. தத்து வம்மிது வெய்துவ தன்றெனி
லொத்தொவ் வாமையை விட்டுயி ரொன்றுதான்
சித்தி யெய்துவ தின்மையிற் சிந்தையான்
முத்தி யெய்த முயலுவ தென்கொலோ.
(இ-ள்.) தத்துவம்
- தத்துவஸ்வரூபமானது, இது
-
இத்தன்மையாக ஜீவாத்மன் பரமாத்மன் இரண்டும் வேறல்லாததாகிய
ஒன்றே யென்பதாகும், (வேறாக நினைப்பது
ப்ராந்தமாகையால்),
எய்துவது - ஜீவாத்மனை விட்டுப்போய் அடையப்பட்ட வேறு வஸ்து
ஒன்று, அன்றெனில் -
அல்லவென்றால், (அதாவது :
ஸர்வபிரகாரத்தாலும் இரண்டும் ஒன்றேயென்று சாதித்தால்), ஒத்து -
ஒரு பிரகாரத்தால் பொருந்தியும்,
ஒவ்வாமையை - மற்றொரு
பிரகாரத்தால் பொருந்தாமையுமாகின்ற தன்மையையும்,
விட்டு -
(இவைகளையெல்லாம் யோசித்து
அவிரோதமாயறியாமல்)
மயங்கிவிட்டு, உயிர் - இவ்வுலகத்தில்
உயிர், ஒன்றுதான் -
ஒன்றேதான், (வேறில்லையென்றால்), சித்தியெய்துவது
-
மோட்சமடைவது, இன்மையில் - அத்தத்துவப்படியில்லாமையால்,
சிந்தையால் - தியானத்தால், முத்தியெய்த
- மோட்சமடைய,
முயல்வது - அத்தத்துவஞானிகள் முயற்சி
செய்து தவம்
முதலானவற்றைச் செய்கின்றது, என்கொல் -
என்ன காரணம்?,
(அடையவேண்டிய பலனில்லாமையால் செய்யும் காரியம் வீணே),
எ-று. (129)
|