320மேருமந்தர புராணம்  


 

     முன்ன மில்லதற் கென்மொழி தானிலை
     பின்னை யில்லதற் கேபிழை யாயதே.

     (இ-ள்.)   சொன்ன    -    ஸர்வ  சூனியத்தைச்  சொல்லிய,
சூனியவாதியும்  -   சூனியவாதியும், சூனியம் - சூனியமாகவேண்டும்,
(அதுவல்லாமலும்   ஸர்வதா   சூன்யமென்பது),  முன்னமில்லதோ -
முன்னாலேயே   இல்லாததோ?   (அல்லது), முன்னமுண்டாயதோ -
பூர்வத்திலிருக்கப்பட்டதோ,        (என்று        கேட்குமிடத்தில்),
முன்னமில்லதற்கு    -    அனாதியாகவே    இல்லாத வஸ்துவுக்கு,
மொழிதான்   -  வசனந்தான், என் - என்ன இருக்கின்றது, இலை -
வசனமேயில்லை,   பின்னையில்லதற்கு   -   முன்னாலிருந்து பிறகு
இல்லையென்ற    வஸ்துவுக்கு,    பிழையாது  -  ஸர்வ   சூனியம்
தவறாகின்றது, எ-று.                                    (132)

 693. தோற்றம் வீதல் தொடர்ந்து நிலைபெற
     லாற்ற வும்பொரு ளின்னிகழ் வாதலாற்
     றோற்ற மாய்ந்திடல் சூனிய மென்றிடி
     னேற்ற வாறுரைத் தானில்லை மற்றதே.

     (இ-ள்.)  தோற்றம் - உத்பாதமும், வீதல் - வியமும், தொடர்ந்து
- இவைகளைச்   சேர்ந்து,   நிலைபெறல் - த்ரௌவ்ய யுத்தமுமாகிய,
(இந்த   உத்பாதவியத்   ரௌவ்ய  யுக்தங்கள்), ஆற்றவும் - மிகவும்,
பொருளின் - திரவியங்களினது, நிகழ்வாதலால் -  நடத்தையாகையால்,
தோற்றம் - உத்பாதமும், மாய்ந்திடல் - வியமும்,  (இவைகளை ஒட்டி)
சூனியமென்றிடில் - தத்துவம்   ஸர்வதா   சூன்யமென்றால், மற்றது -
மற்றதாகிய த்ரௌவ்ய தத்துவமானது, ஏற்றவாறு  - இசையும் விதமாக,
உரைத்தானில்லை - சொன்னவனல்ல எ-று.

     இதனால்    உலகத்தில்   பிரத்தியட்ச விரோதமாகின்றதென்பது
பெறப்படும்.                                            (133)

 694. இட்ட திட்ட மெறிந்து தன் கோளினை
     விட்டு மாறெய்தித் தன்சொல் விரோதியா
     கெட்ட வாறிவை தீநெறி கேளினி
     மட்டு லாமுடி யாய்நல்ல வாநெறி.

     (இ-ள்.)  மட்டு - மதுஜலமானது,  உலாம் - வியாபித்திராநின்ற,
(பூமாலையையணிந்த),   முடியாய் - முடியையுடைய  கிரணவேகனே!,
இட்டம் - (ஆப்தேஷ்டம், ஆகமேஷ்டம், பிரத்திய  பிஜ்ஞானேஷ்டம்,
கர்மபலஸம்பந்தேஷ்டம், ஸம்ஸாரேஷ்டம்,  மோட்சேஷ்டம், என்னும்)
ஆறு   இஷ்டங்களையும்,   திட்டம் -   (லோகப்ரவர்த்தி திருஷ்டம்
புருஷப்ரவர்த்தி    திருஷ்டம் ஸாஸ்திரப்ரவர்த்தி திருஷ்டம்) என்னும்
மூன்று   திருஷ்டங்களையும்,   எறிந்து - கெடுத்து, தன்கோளினை -
தனது