70. வீட்டி னின்றது வெவ்வினை யெண்மையின்
கேட்டி லெண்குண மெய்தியோர் கேடிலா
மாட்சி யாலுல கந்தொழ மாற்றற
வோட்டி வைத்தசெம் பொன்னொத் தொளிருமே.
(இ-ள்) வீட்டினின்றது - மோட்சஜீவன்,
வெவ்வினையெண்மையின் - தீயனவாகிய ஞானாவரணாதி
அஷ்டகர்மங்களின், கேட்டில் - கெடுகையினாலே (அதாவது
கர்மரஹிதத்வத்தினால்), எண்குணமெய்தி - அனந்தஞானமுதலாகிய
அஷ்டகுணங்களை யடைந்து, ஓர் கேடிலா - எக்காலமும் ஒரு
கெடுதியுமில்லாத, மாட்சிமையால். பெருமையினாலே, உலகம் -
உலகத்திலுள்ள பவ்வியப் பிராணிகள், தொழ - வணங்க, மாற்றற -
களங்கமற, ஓட்டிவைத்த - புடம்போட்டுக்களங்கம் நீக்கி
வைக்கப்பட்ட, செம் - சிவந்த, பொன்னொத்து - ஸ்வர்ணத்துக்குச்
சமானமாகி, ஒளிரும் - தன்னிலையில் பிரகாசிப்பதாகும், எ-று. (70)
71. மாற்றி னின்றது வையக மூன்றினு
மாற்ற வும்பரி யட்டமோ ரைந்தினாற்
றோற்றம் வீத றொடர்ந்திடை யில்வினைக்
காற்றி னாற்கதி நான்கிற் சுழலுமே.
(இ-ள்.) மாற்றில் நின்றது - (முன் சொல்லியதற்கு) மாற்றமாகிய
ஸம்ஸார நெறியில் நின்ற ஸம்ஸார ஜீவன், வையகமூன்றினும் -
மூன்றுலோகத்திலும், ஆற்றவும் - மிகவும், பரியட்ட மோரைந்தினால்
- (திரவிய, க்ஷேத்திர, கால, ஹாவ பவமென்னும்) பஞ்சபரி
வர்த்தனைகளினால், தோற்றம் - பிறத்தலும், வீதல் - சாவதும் (ஆகிய
இவைகளை), தொடர்ந்து - சேர்ந்து, இடையில் - மத்தியில்,
வினைக்காற்றினால் - கருமங்களாகிற காற்றினால், கதிநான்கில் -
(நாரக, திரியக், மனுஷ்ய, தேவ என்னும்) நாலு கதிகளிலும், சுழலும் -
சுழலா நிற்கும், எ-று.
பரிவர்த்தனைகளின் விவரங்களைப் பதார்த்தசாரத்தில்
முப்பதாவது அதிகாரத்தில் பார்த்துக்கொள்க. (71)
72. மானு டம்பு விடாகதி நான்கெய்து
மீன மில்விலங் கிலுமோர் நான்கெய்தும்
வானின் வந்து விலங்கு மனிதனா
மீன மில்லவை யெய்திடு நாரகன்.
(இ-ள்.) மானுடம்பு - மனுஷ்ய சரீரத்தை உடைய ஜீவன், விடா
- அந்தச் சரீரத்தைவிட்டு, கதிநான்கு - நாலு கதிகளிலும்,
(எதிலானாலும் தனது பரிணாமத்தின்படி தன் தன் பாவத்தினால்),
எய்தும் - அடையும், ஈனமில் - குறை
|