மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 335


 

பயத்தை,  ஆக்கி   -   செய்து,   அந்த  மூழ்த்தளவு - ஒரு அந்தர்
முகூர்த்தகாலம் வரையில்,   நிற்கும் - அப்பரிணாம நிலைமை நிற்கும்,
எ-று.                                                  (161)

 722. உபசம காலத் துள்ளோ ரனந்தானு பந்தி தோன்றிற்
     குபதமாஞ் சாதஞ் சம்மாத் திட்டியாங் குணத்தை யெய்து
     முபசம காலத் தின்பின் மூன்றத்தொன் றுதய மாதல்
     சபதமா மிச்சஞ் சம்மா மிச்சிலத் தன்மை தானாம்.

     (இ-ள்.)   உபசம   காலத்துள் -   உபசம காலமாகிய அந்தர்
முகூர்த்தம் நிரம்புவதற்குள் (அந்திய பாகத்தில்), ஓர் அனந்தானுபந்தி
-   அனந்தானுபந்தி (குரோத, மான, மாயா, லோபங்களுள் யாதானு)
மொன்று,   தோன்றில்   -   உதயஞ்  செய்யுமானால், குபதமாம் -
குத்ஸிதபதமாகும்   (அதாவது :  ஸம்மியக்துவ பர்வதத்து மேனின்று
தலை கீழாக  விழுகிற  பரிணமமாகும்;   அவ்வாறாகி  அது), சாதஞ்
சம்மாத்திட்டியாம் - ஸாஸதான   ஸம்மியக்திருஷ்டியாகிற, குணத்தை
- குணஸ்தானத்தை, எய்தும் - அடையும்,  உபசம காலத்தின் பின் -
உபசமகாலப்    பிரமாணமான    ஒரு  அந்தர் முகூர்த்தத்தின்மேல்,
மூன்றத்தொன்று   -    (மித்தியாத்துவம், ஸம்மியக் மித்தயாத்துவம்,
ஸம்மியக்துவ    பிரகிருதிகளாகிய)    மூன்றில்   யாதாகிலுமொன்று,
உதயமாதல்   -   உதயங்கொடுத்தல்,  சபதமாம் - அந்த பதமாகும்,
(அவ்வாறாவதில்),   மிச்சம் - (மித்தியாத்துவம் உதயங் கொடுத்தால்)
மித்தியாத்துவமும்,   சம்மாமிச்சு - (ஸம்மியக் மித்தியாத்துவ முதயங்
கொடுத்தால்)   ஸம்மியக் மித்தியாத்துவமும், (அல்லது  மிஸ்ரீகுணம்),
இலத்தன்மை   ஆம்   -   (மித்தியாத்துவமில்லாத    ஸம்மியக்துவ
பிரகிருதியுதயமானால் அப்போது) ஸம்மியக்துவமுமாகும், எ-று.

     தான் - அசை.                                    (162)

 723. வேதக முதித்த போழ்தின் மெய்யுணர் வோடு காட்சிக்
     கியாதுமோர் குற்ற மெய்தா தெறியுந்தீ வினைக டம்மைப்
     போதியுங் காட்சி தானும் பூரணை சென்று நின்று
     காதவே தகமுன் னேழைக் காட்சிகா யிகம தாமே.

     (இ-ள்.)   வேதகம்  -  ஸம்மியக்துவ பிரகிருதியானது, உதித்த
போழ்தில்   -   உதயத்தைக்  கொடுத்த காலத்தில், மெய் - உண்மை
ஸ்வரூபத்தை யறியும்படியான, உணர்வோடு - ஸம்மியக் ஞானத்தோடு,
காட்சிக்கு   -   ஸம்யக்   தரிசனத்திற்கும்,   யாதும்  - எவ்வளவும்
(அதாவது :   கொஞ்சமாகிலும்),   குற்றம்  -  குற்றத்தை, எய்தாது -
அடையாமல்,   தீவினைகள்   தம்மை -  பாபவினைகளை, எறியும் -
கெடுக்கும், (அப்போது), போதியும் - ஸம்மியக்ஞானமும், காட்சிதானும்
- ஸம்மியக் தரிசனமும்,  பூரணை சென்று - பூர்த்தியடைந்து, நின்று -
நிலைபெற்று, வேத