(இ-ள்.)
(அவன் அவ்வாறு பிறந்திருக்கும்போது), இருவரும் -
முன்சொன்ன ஆரியாங்கனைகளிருவரும், இயம்ப - முனிவன் சொல்ல,
கேட்ட - செவிக்கொண்ட, அறத்தினராகி
- தர்மத்தை
யுடையவர்களாகி, போக - (அவனைவிட்டு நீங்கிச் சிறிது
தூரஞ்)
செல்ல, பெரியவன் - மஹா தபத்தையுடைய
கிரணவேக
முனிவனாகியமேலோன், குகையை - பர்வத
குகையை, சேர -
அடைய, (அம்மலைப்பாம்பானது அவனை விழுங்க வேண்டி), எரியெழ
- கண்களில் அக்கினி எழும்படி, விழித்து - அவற்றைத்திறந்து, காணா
- அம்முனிவனைப்பார்த்து, பிறை -
மூன்றாம் பிறை போல
வளைவாகிய, எயிறு - பற்கள், இலங்க - விளங்க,
அங்காந்து -
வாயைத்திறந்து, இறைவனை - மேலானவனாகிய அம்முனிவரனை,
பிடித்த போழ்தில் - பற்றினகாலத்தில், (அவன்), அருகவென்று
-
அருகனே என்று, உரைப்ப - சொல்ல, மீளா - அதைக்கேட்டுத்
திரும்பி வந்து, அச்சியர் - ஆரியாங்கனைகளிருவரும், அதனை -
அம்மலைப்பாம்பால் அம்முனிவனுக்கு நேர்ந்த தீங்கினை, கண்டார் -
பார்த்தார்கள், எ-று. (182)
743. வெகுண்டுவெய் துயிர்த்துச் சீறி விழித்தன லுமிழ்ந்து வெண்ப
லகண்டமுஞ் சிலிர்ப்ப வங்காந் தரவுக்கஞ் சாது
நாதன்
நுகந்திரண் டனைய தோளைப் பற்றியாங் குற்ற போழ்தின்
முகங்கண்டார் முனிவ னோடு மூவரும் விழுங்கப் பட்டார்.
(இ-ள்.) (அவ்வாறு
பார்த்தவுடனே), வெகுண்டு - கோபித்து,
வெய்துயிர்த்து - வெப்பமாகப் பெருமூச்சு விட்டு, சீறி
- சப்தித்து,
விழித்து - கண்களை விழித்து, அனலுமிழ்ந்து - அக்கினியைக் கக்கி,
வெண் . வெளுப்பாகிய, பல் - பற்கள், அகண்டமும் - முழுமையும்,
சிலிர்ப்ப - சிலிர்த்துக்கொள்ள, அங்காந்த - வாயைத்திறந்த, அரவுக்கு
- அந்த மலைப்பாம்பிற்கு, அஞ்சாது
- (இந்த
ஆரியாங்கனைகளிருவரும்) பயப்படாமல்,
நாதன் -
முனிசிரேஷ்டனாகிய கிரணவேக முனிவனுடைய, நுகந்திரண்டனைய -
நுகத்தடிதிரண்டதுபோலத் திரட்சிபெற்ற, தோளை - புயங்களை, பற்றி
- பிடித்து, ஆங்குற்ற போழ்தின்
- அவ்விடத்தில் அந்த
ஸர்ப்பத்தினெதிரிலடைந்து இழுத்த காலத்தில்,
(அப்பாம்பு
அம்முனிவனைக் கழுத்து வரையிலும் விழுங்கிவிட), முகங்கண்டார் -
அவனது முகத்தை மாத்திரம்
கண்டவர்களாகி, (தாங்களும்
அப்பாம்பின் வாய்க்குட்பட்டு), முனிவனோடும்
- கிரணவேக
முனிவனோடு, மூவரும் - (அம்முனிவர் இந்த ஆரியாங்கனைகள்
ஆகிய) மூன்று பேர்களும், விழுங்கப்பட்டார் - அந்த ஸர்ப்பத்தினால்
விழுங்கப்பெற்றார்கள், எ-று.
அங்காந்தரவுக்கு, என்பதில்
அகரந்தொக்கது. (183)
744. அருக்கனைச் சனிசெவ் வாயோ டரவுதான் விழுங்கிற் றேபோ
லருக்கவே கன்றன் னோடே யாரியாங் கனைக டம்மை.
|