வைசயந்தன் முத்திச்சருக்கம் 35


 

     (இ-ள்.)   நின்ற   -   கீழிலிராநின்ற,  நால்வகைய  தேவர் -
நாலுவிதமாகிய  (அதாவது :  பவண, வியந்தர, ஜோதிஷ்க, ஸௌதர்ம
ஈசான்யராகிய நாலுவகை) தேவர்களும், நீர் - அப்புகாயிகங்களாகவும்,
மரம்  -  வநஸ்பதிகாய  சீவன்களாகவும், நிலங்கள் -  பிருத்திவிகாய
சீவன்களாகவும்,  ஆவர் - பிறப்பார்கள் (என்றதனால், தேயு, வாதகாய
சீவன்களாகார் என்பது பெறப்படும்),  நீர்  - அப்புகாயிக சீவன்களும்,
மரம் - வநஸ்பதி  சீவன்களும்,  நிலங்கள் - பிருத்திவி  சீவன்களும்,
விலங்கொடு   -   விலங்கு  ஜாதியோடு,  மக்கடம்மில்  -  மனுஷ்ய
ஜன்மத்திலும்,    செல்லும்   -   போய்ப்  பிறக்கும்,   சீர்மையில் -
சிறப்பில்லாத,   விலங்கும் - விலங்குகளும்,  மக்கள்  மனுஷ்யர்களும்
(என்றதனால் தெளிவில்லாத மோஹனீய உத்க்ருஷ்ட ஸ்திதிபந்தமுள்ள
சீவன்கள்   என்பது   பெறப்படும்), தீயோடு  -  தேஜஸ்காயத்தோடு,
வளியுமாவர் -  வாதகாய  சீவன்களாகவும் பிறப்பார்கள், நீர்மையில் -
குணமில்லாத (மிகவுந் தாழ்ந்த), நெருப்பின் - நெருப்பிலும், காற்றின் -
காற்றிலும்,  நின்றன - நிலைபெற்றனவாகிய  தேஜஸ்காய  சீவன்களும்
வாதகாய  சீவன்களும், விலங்கிற்றோன்றும் -  விலங்கு ஜாதியிலேயே
பிறக்கும் (மனுஷ்யராகப் பிறவார் என்றபடி), எ-று.              (74)

 75. அருகன துருவ மில்லா ரகமிந்தி ரத்துட் டோன்றா
    ரருமையிற் சாச ராந்த மடைவரா சீவ ரன்றிப்
    பிரமனை யந்த மாகப் பரிப்பிரா சகருஞ் செல்வர்
    மருவுவர் சோதி டாந்தம் மற்றத்தா பதர்க டாமே.

     (இ-ள்.) அருகனது - அருகத்பரமேஸ்வரனுடைய, உருவமில்லார்
- ரூபமாகிய   நிர்க்கந்ததபம்   பண்ணாதவர்கள்,  அகமிந்திரத்துள் -
அகமிந்திரலோகமாகிய       நவக்கிரைவேயகம்,       நவானுதிசை,
பஞ்சானுத்தரங்களில்,  தோன்றார்  -  பிறக்கமாட்டார்கள்,  ஆசீவர் -
சுவேதாம்பரிகள்,  அருமையில்   -   மஹா  அருமையினால்,  (மிகத்
தபசுபண்ணி சாசராந்தம் ஸஹஸ்ராரகல்பம்  வரையிலும்),  அடைவர் -
செல்லுவார்கள்,  பரிப்பிராசகரும்   -   பரிவ்ராஜக   சன்னியாசிகள்,
பிரமனையந்தமாக   -    பிரம்ம   கல்பம்   வரையிலும், செல்வர் -
செல்லுவார்கள்,    மற்றத்தாபதர்கள்   -   (பஞ்சாக்னி    மத்தியில்
தபம்பண்ணப்பட்டவர்கள்   முதலாகிய)     மற்ற     பாஷண்டிகள்,
சோதிடாந்தம்   -    பவண,    வியந்தர,      ஜோதிஷ்கரென்னும்
கீழ்முத்தேவர்களாகவே, மருவுவர் - அடைவார்கள், எ-று.      (75)

வேறு.

 76. நற்காட்சி யுடைவிலங்கும் மானிடரும் வதஞ்செறிந்துங்
    கற்பாதி முதலாகக் கற்பாந்த முறச்செல்வர்
    நற்பால வதஞ்செறிந்த நார்விலங்கு பவணாதி
    கற்பாந்தஞ் சாசராந் தங்காண்பர் முறையுளியே.