759. அஞ்சுவரு டங்கடந்து நாமகளோ டாடி
வெஞ்சிலை முதற்படை பயின்றபினை
வெம்பூஞ்
செஞ்சரம் வரிந்தசிலை யேந்தித்திறன்
மாரன்
மைந்தனொடு போர்தொடங்கி
வாளிதொட லுற்றான்.
(இ-ள்.)(அதன்மேல்), அஞ்சுவருடம் - ஐந்து ஆண்டு (அதாவது :
ஐந்து வயது), கடந்து - தாண்டி,
நாமகளோடு - சரஸ்வதி
தேவியோடு, ஆடி - விளையாடி, (அதாவது : சாஸ்திரங்களைக்கற்று
அதன் பிறகு), வெம் - வெவ்விதாகிய, சிலைமுதல் - வில்முதலாகிய,
படை - ஆயுதவித்தைகளையும், பயின்றபினை - கற்ற பிறகு, வெம் -
விருப்பமுடைய, செம் - செம்மையாகிய,
பூஞ்சரம் - புஷ்ப
பாணங்களை, வரிந்த - தொடுத்த, சிலை - கரும்புவில்லை, ஏந்தி -
தரித்து, திறல் - பராக்கிரமத்தையுடைய, மாரன் - மன்மதனானவன்,
மைந்தனொடு - இச்சக்ராயுத குமாரனோடு,
போர் தொடங்கி -
யுத்தஞ் செய்ய வாரம்பித்து,
வாளி - புஷ்ப பாணத்தை,
தொடலுற்றான் - தொடுத்து இவன்மீது விடுவதற்கு ஆரம்பித்தான்,
எ-று.
இவ்வாறு கூறியதனால்,
இவன், மதனன் போர்ச்செய்கைக்
கிடந்தரத்தக்க யௌவனத்தையடையந்தான் என்பது பெறப்படும். (11)
760. ஆங்கதனை மன்னனப
ராசித னறிந்து
கோங்கரும்பு போலுமுலைக்
கொவ்வையெனச் செவ்வாய்
தேங்குழலி சித்திரநன் மாலையெனுஞ்
செம்பொன்
வாங்கனைய தோளிதுணை யாகமலி
வித்தான்.
(இ-ள்.) ஆங்கு -
அவ்விடத்தில், அதனை - (குமாரன்
யௌவனமடைந்த) அவ்விஷயத்தை, மன்னன்
- அரசனாகிய,
அபராசிதன் - அபராஜிதனென்பான்,
அறிந்து - தெரிந்து,
கோங்கரும்புபோலும் - கோங்கின்
அரும்புபோலும், முலை -
ஸ்தனங்களையும், கொவ்வையென - கோவைக்கனிபோன்ற,
செவ்வாய்
- சிவந்த வாயையும், தேம் - வாசனை
பொருந்திய, குழலி -
அளகத்தையுமுடையவளாகிய, சித்திர நன் மாலையெனும்
- நல்ல
சித்ரமாலையென்று பெயர் கூறக்கூடிய,
செம்பொன் - சிவந்த
பொன்னாலாகிய, வாங்கனைய - வாங்குக்குச் சமானமாகிய, தோளி -
கைகளையுடைய ஒரு ராஜகுமாரத்தியை, துணையாக - (அவனுக்குப்)
பெண்சாதியாக, மலிவித்தான் -
அன்பில் மிகுந்திருக்கும்படி
செய்தான் (அதாவது : அன்பு மிகுந்த மனைவியாகச் செய்தான்),
எ-று. (12) 761. மின்னினொடு மேகம்விளை யாடுவது போல
வன்னநடை யோடவ னமர்ந்தொழுகும் வழிநாண்
|