(இ-ள்.) (இவள் இவ்வகை அழகு பெற்றிருக்கும்போது),
மயில் -
ஆண் மயில்போன்ற, இயல் - சரீரச்சாயலும்,
அன்னம்போலும் -
ஹம்ஸபக்ஷி போன்ற, மென்னடை - மிருதுவாகிய நடையும், மான்மை
நோக்கும் - பெட்டை மான் போன்ற மருண்ட பார்வையும், குயில் -
குயிலிசையையும், குழல் - புள்ளாங்குழலிசையையும்,
யாழ் -
வீணையிசையையும், (நிகர்த்த), நல்
- நல்ல, மழலைமொழி -
மழலையாகிய வசனமும், (உடைய), மலர்க்கொடியனாள்
தன் -
புஷ்பக்கொடி போல்பவளாகிய இந்த இரத்தின
மாலையினுடைய,
இயல்பெலாம் - அழகதிசயங்களெல்லாம், தூதரால் - ஒற்றர்களினால்,
சக்கராயுதன் - சக்கராயுத வரசன், அறிந்து - தெரிந்து, பின்னை -
(முன்னுரைத்தபடி தன் புத்திரனுக்கு மணஞ் செய்ய
வேண்டுமென்று
கருதியிருந்ததற்குப்) பிறகு,
தையலை - இக்கன்னிகையை,
வச்சிராயுதற்கு - தனது குமாரனாகிய வஜ்ராயுதனுக்கு,
தருகென -
கொடுக்க வேண்டுமென்று, தூது - தூதர்களை, விட்டான் - (அவள்
தந்தையிடம்) அனுப்பினான், எ-று. (22)
771. தூதர்வந் துரைத்த மாற்றங் கேட்டதி வேகன் சொன்னான்
போதுலாங் குழலை மைந்தன் புணர்ந்திடிற் புகழ்ச்சித் தாமென்
றியாதுநீ ருரைத்த தெல்லா மிசைந்தன னென்னப் பின்னை
நீதிநூல் வகையின் வேள்வி யாகுதி நெறியிற் செய்தார்.
(இ-ள்.) (அவ்வாறனுப்பப்பட்ட),
தூதர் - தூதர்கள், வந்து -
பிருதிவிதிலக நகரம் வந்து, உரைத்த
- சொன்ன, மாற்றம் -
வசனத்தை, அதிவேகன் - அதிவேக மகாராஜன், கேட்டு - கேட்டு,
போதுலாம் - புஷ்பங்கள்
தங்கியிருக்கப்பட்ட, குழலை -
அளகத்தையுடைய நமது புத்திரியை, மைந்தன் - வச்சிராயுத குமாரன்,
புணர்ந்திடில் - சேர்ந்தால், (அது),
புகழ்ச்சித்தாம் - பெருமையை
யுடையதேயாகும், என்று - என்று, சொன்னான் - சொன்னவனாகி,
பின்னை - பின்னையும், யாது - எதுவானாலும்,
நீர் - நீங்கள்,
உரைத்தது யாது - சொல்லியது எதுவோ, எல்லாம் - அதற்கெல்லாம்,
இசைந்தனன் - நான் சம்மதித்தேன், என்ன
- என்று சொல்ல,
(அவன் சம்மதத்தின் பேரில்
பெரியோர் அப்பெண்ணுக்கும்
குமரனுக்கும்), நீதிநூல் வகையின் -
நீதி சாஸ்திர கிரமத்தால்
(ஏற்பட்ட), வேள்வி - கலியாண வேள்வியை, ஆகுதி நெறியில் -
ஓமாகுதியின் விதிப்படி, செய்தார் - செய்தார்கள், எ-று. (23)
772. கடிமலர்க் கொடிய னாளைக் காவல குமர னெய்தி
வடிவுடைத் தடக்கை வேழம் பிடியொடு
மகிழ்வ தேபோற்
கொடிமலர்ப் பந்தர் குன்றம் வாவியுங் காவு
மெய்திப்
படிமிசைப் பட்ட வின்பம் பரிவின்றி நுகரு நாளில்.
|