சாதத்தின் கன்றில்
- கற்பக விருக்ஷத்தினது இளங்கன்றுபோல,
மைந்தன் - இரத்தினாயுத
குமாரனானவன், பரிவின்றி
-
துன்பமில்லாமல், வளர்ந்து - வளர்ந்து
யௌவன வயதையடைந்து,
வேரிசூழ் - வாசனைநிறைந்த, கூந்தலாரை
- அளகத்தையுடைய
இராஜ கன்னிகைகளை, வேள்வியால் - ஒளபாசன விவாக
விதிக்கிர
மத்தால், எய்தி - அடைந்து, பூரியா
- (தேகம் சந்தோஷத்தால்)
பூரித்து, இன்பம் - சௌக்கியம்
பொருந்திய, மனத்தனாகி -
மனதுடையவனாகி, போகத்தின் - காமபோகத்தில், ஆற்ற - மிகவும்,
வீழ்ந்தான் - மூழ்கினான், எ-று. (26)
775. தானுந்தன் மகனும் பின்னை யவன்மகன் மகனு மாய்ப்பே
ரானந்தத் தழுந்து கின்ற நல்லப ராசி தன்போ
யூனந்தீர் தவத்தி லூற்றுச் செறித்தமா தவனை
யேத்தி
யீனந்தீ வினைகட் காக்கு முபாயமென் னிறைவ வென்றான்.
(இ-ள்.) (இவன் இவ்வாறிருக்கின்ற காலத்தில்), தானும் - தானும்,
தன் மகனும் - தன் புத்திரனாகிய சக்ராயுதனும், பின்னை - பின்பு,
அவன் மகன் - அவன் குமாரனாகிய
வஜ்ராயுதனும், மகனும் -
அவன் குமாரனாகிய இரத்தினாயுதனும்,
ஆய் - விருத்தியாகி,
(இப்படிப் புத்திர, பவுத்திர, பிரபவுத்திரர்களோடு), பேர் - பெரிதாகிய,
ஆனந்தத்து - ஸம்ஸாரசுகத்தில், அழுந்துகின்ற - தங்கியிராநின்ற,
நல் - நன்மைபொருந்திய, அபராசிதன் -
அபராஜித மகாராஜன்,
போய் - தப ஸ்ரீஷ்ட முனிகளிருக்கும் இடம்சென்று, ஊனந்தீர் -
குற்றநீங்கிய, தவத்தில் - தபஸினால்,
ஊற்று - ஆஸ்ரவத்தை,
செறித்த - தடைசெய்த, மாதவனை
- மஹா தபஸையுடைய
பிஹிதாஸ்ரவரை, ஏத்தி - ஸ்தோத்திரம் செய்து, இறைவ - நாதனே!,
தீவினைகட்கு - பொல்லாங்காகிய கருமங்கட்கு, ஈனமாக்கும் -
குறைவைச் செய்யும் (அதாவது :
அக்கருமங்களைக் குறைத்து
நீக்கும்படியான), உபாயம் - உபாயமானது, என் - யாது?, என்றான் -
என்று கேட்டான், எ-று. (27)
776. வினையுயிர் கட்டு வீட்டின் மெய்ம்மையையறிந்து தேறித்
தினையனைத் தானும்பற்றிற் செறிவிலா நெறியை மேவித்
தனைவினை நீங்கி நின்ற தன்மையை னாக நோக்க
வினையெனைத் தானும் நீங்கும் விகாரங்க ளோடு மென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு வினவியவுடனே),
வினை - கர்மங்களினது,
மெய்ம்மையை - உண்மை ஸ்வரூபத்தையும்,
உயிர் - ஜீவனுடைய,
மெய்ம்மையை - உண்மை ஸ்வரூபத்தையும், கட்டு -
ஜீவனிடத்தில்
கர்மங்கள் பந்திக்கும் பந்தத்தின்,
மெய்ம்மையை - உண்மை
இயல்பையும், வீட்டின் - ( அக்கருமங்கள்
ஆத்மனைச்சேர்ந்து
பந்திக்காமல் நீங்கி நின்றுவிடுகிற ஜீவனுடைய சுத்தத்தன்மையாகிற)
மோட்சத்தின், மெய்ம்மையை - யதாஸ்வரூபத்தையும்,
அறிந்து -
ஸம்மியத்
|