சக்கராயுதன் முத்திச் சருக்கம் 373


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  நுரையினும் - பால்நுரையைப் பார்க்கிலும், நொய்யவாய
-  மிருதுவுள்ளனவாகிய, நுண் - நேர்த்தி பொருந்திய, துகில் - பட்டு
வஸ்திரங்களை, உடுப்பின் - உடுத்துக்கொள்ளுமிடத்தில், (அவற்றைத்
தாங்கமுடியாது),  நொந்து - வருந்தி, கரைவபோல் - மனம் உருகிக்
கதறுவதுபோல்,   நாலும் -  (மேகலாபரணத்தால்)  ஒலி  செய்கின்ற,
அல்குல் -    அல்கு      வினையுடைய,    கற்பகவல்லியன்னார் -
கற்பகக்கொடிக்  கொப்பாகிய  மிகு  புண்ணியமுடைய  மாதர்களும்,
(அப்புண்ணிய முலர்ந்தால்  உடுப்பதற்கோராடையுமின்றி), தெருவிடை
- தெருவினிடத்தில்,   வீழ்ந்து   -   வீழ்ந்து   கிடந்து,  தீண்டா -
தொடுவதற்கொப்பாத,  சிலதுணி - சிலவாகிய கந்தைத்துணிகளையும்,
உடுப்பர் - உடுத்துவார்கள், (ஆகையால்),  செல்வம் - ஸம்பத்தானது,
ஒருவர்கண் - ஒருவரிடத்திலேயே, என்றும் - எப்பொழுதும், நில்லாது
- ஸ்திரமாக    நிற்கமாட்டாது,  (ஆகையால்  குமாரனே!),  உறுதி -
உறுதியாகிய   குணத்தை,  கொண்டு   -  ஸ்வீகரித்து,     ஒழுகு -
நடப்பாயாக, என்றான் - என்றும் சொன்னான், எ-று. (49)

 798. இனையன பலவுஞ் சொல்லி வச்சிரா யுதனும் பின்னைத்
     தனையனை விடுத்துப் போகிச் சக்கரா யுதனைச் சார்ந்து
     முனிவனற் கமல மன்ன வடியினை முடியிற் றீட்டி
     வினையின பயன்க டம்மை வெருவின னடிக ளென்றான்.

   (இ-ள்.) (மேலும்),  இனையன -   இத்தன்மையனவான, பலவும் -
பல தர்ம  வசனங்களையும்,  சொல்லி  - உரைத்து, வச்சிராயுதனும் -
அந்தவச்சிராயுத மகாராஜனும், பின்னை - பிறகு, தனையனை - தனது
குமாரனாகிய  இரத்தினாயுதனை, விடுத்து -  இராஜ்யத்தில் விடுத்து,
போகி -   தான்   தபோவனத்திற்குப்    போய்,   சக்கராயுதனை -
சக்ராயுதமுனிவனை,     சார்ந்து    -    அடைந்து,   முனிவன்  -
அம்முனிவரனுடைய,  நல் -  நன்மையாகிய, கமலமன்ன - தாமரைப்
புஷ்பத்திற்குச் சமானமாகிய,  அடியினை  -  பாதங்களை, முடியில் -
சிரசில், தீட்டி - படியச்செய்து,  (அதாவது : அவ்வடிகள் முடியிற்பட
வணங்கி அவனை நோக்கி),  அடிகள் - ஸ்வாமிகளே!, வினையின -
கருமங்களினது,    பயன்கடம்மை    -   பலன்களாகிய   ஸம்ஸார
விஷயங்கட்கு,  வெருவினன் -  யான் பயந்தேன், என்றான் - என்று
சொன்னான், எ-று. (50)

 799. புலைமக ரெனினுஞ் சாலப் புயவலி யுடைய ராகின்
     நிலைமகட் கிறைவ ராகி நின்றிடுந் திருவு மங்கே மலையின
     குலத்த ரேனும் புயவலி மாய்ந்த போழ்திற்
     றலைநில னுறுத்தி யொன்னார் தாளணைந் துழைய ராவார்.

    (இ-ள்.) அவ்வாறு  சொல்லிப்  பின்னரும்), புலைமகரெனினும் -
(சிலர்) கெட்டகுணமுடைய ஜாதியிற் பிறந்தாராகிலும்,  சால - மிகவும்,
புயவலி - புஜ