ஷாதிகள் வரவொட்டாது
சுத்தோபயோகத்திற்
செல்லும்
ஆத்மபாவனையும்), காந்தி - சுத்தசாரித்திரமும், தயா - ஜீவதயவை,
மலிந்து - நிறைந்து, யாக்கை - ஷட்ஜீவநிகாய ஸமூகத்தை,
நோக்கி
- பார்த்து, (அவற்றை உபசரித்தலாகிய),
அமைவரும் - சேர்ந்து
அனுஷ்டிப்பதற்கரிதாகிய, தொழிலர் - (பிராணி
ஸம்யமமாகிய)
தொழிலும் உடையவர்களாகியும், அன்றி
- அவையல்லாமலும்,
அச்சங்களேழும் - ஸம்மியக்தர்சன ஞானபலத்தால் ஸப்த பயங்களும்,
இன்றி - இல்லாமலும், நமர் பிறர் என்பதின்றி -
நம்மவர் அன்னியர்
என்னும் பேதமில்லாமலும், (தெளிந்து),
ஒழிதல் - ஸர்வஸங்க
பரித்தியாகம் பண்ணுதலும், (ஆகிய),
இது - இத்தன்மையானது,
மாதவம் - மஹாதபம், ஆம் - ஆகும், அமைக -
இப்படிப்பட்ட
தபத்தைச் சேர்வாயாக, என்று -
என்று, இறைவன் - முன்
அரசனாயிருந்த சக்கராயுத முனிவரன்,
சொல்ல - சொல்ல,
(வச்சிராயுதன்), அருந்தவம் - செய்தற்கரிய தபஸை, தொடங்கினான் -
செய்யத்தொடங்கி ஏற்றுக்கொண்டான், எ-று. (53)
802. அரியன செய்ய வல்லா ரான்றவ ரன்றி யாரே
வரிசையின் மன்னன் மைந்தன் மைந்தனும் வையந் தன்னை
யொருதுகள் போல விட்டா ருலகெலா மிறைஞ்ச நின்றா
ரிரவியே யன்றி நின்ற விருள்கடிந் தெழலு முண்டோ.
(இ-ள்.) அரியன - செய்தற்கருமையானவற்றை, செய்ய -
செய்து
பலன் பெறுவதற்கு, வல்லார் - வல்லமையையுடையவர்கள்,
ஆன்றவரன்றி - பெரியோர்களாகிய குணவந்தரேயல்லது,
யார் -
மற்றெவர்கள்?, ஆன்றவர் -
பெரியோராவர்?, வரிகையில் -
குணத்தின் கிரமத்தால், மன்னன் - அபராஜித மகாராஜனும்,
மைந்தன்
- அவனுடைய குமாரன் சக்ராயுதனும், மைந்தனும்
- அவனுடைய
குமாரன் வஜ்ராயுதனும்,
(ஆகிய இம்மூவர்களும்
அரியன
செய்யவல்லவர்களா யிருந்தமையின்), வையந்தன்னை -
இந்தப் பூமி
ராஜ்யத்தை, ஒரு துகள்போல -
ஒரு தூளுக்குச் சமானமாக,
(எண்ணி), விட்டார்
- பரித்தியாகம்
பண்ணிப்
பெரியோர்களாயினார்கள், (அதனால்), உலகெலாம் -
இந்த
லோகத்திலுள்ள பவ்வியப்
பிராணிகளெல்லாம், இறைஞ்ச -
வணங்கும்படியாக, நின்றார் - ஏகத்துவபாவனையில்
நின்றார்கள்,
(இன்னும்),இரவியேயன்றி - ஸூர்யனேயல்லாமல், நின்ற -
உலகத்தில்
வியாபித்து நின்ற, இருள் - அந்தகாரத்தை, கடிந்து - நீக்கி, எழலும்
- செல்வதும், உண்டோ - வேறொன்றுண்டோ?, (இல்லை; அதுபோல
இத்தகைய ஆன்றோரன்றி அஞ்ஞானாந்தகாரத்தை
வேறொருவர்
நீக்கமாட்டார்), எ-று.
‘ஆன்றவர்? என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (54)
803. திக்கய மலையைப் போலச் சிந்தனை திருத்திச் சின்னா
ளர்க்கன்வந் துதயத் துச்சி யடைவதே போல வந்து
|