382மேருமந்தர புராணம்  


 

எட்டாவது :

வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம்.

813. அரச னாயநல் லரத னாயுதன்
    பிரச மார்குழற் பிணைய னாரொடும்
    வரைசெய் தோளவன் மகிழ்ந்த வார்த்தையை
    யுரைசெய் வன்னினி யுரக ராசனே.

     (இ-ள்.)   உரகராசனே   -   தரணேந்திரனே!,   அரசனாய -
இராஜாவாகியிருந்த,   நல்    -    நன்மையாகிய,   அரதனாயுதன் -
இரத்தினாயுத    மஹாராஜன்,   வரைசெய்  - பர்வதம்போல் கெட்டி
பொருந்திய, தோளவன் - புயத்தையுடையவனாய், பிரசம் - வண்டுகள்,
ஆர்  - நிறைந்து மொய்த்திராநின்ற, (பூமாலைகளை யணிந்த), குழல் -
அளக   பாரத்தையுடைய, பிணையனாரொடும் - பெட்டை மான்போல
மருண்ட   பார்வையையுடைய    ஸ்த்ரீமார்களுடன்,      மகிழ்ந்த -
சந்தோஷித்திருந்த  செய்கையைப்பற்றிய, வார்த்தையை - சொற்களை,
இனி    -   இனிமேல்,     உரை செய்வன் - சொல்லுவேன், (என்று
ஆதித்யாபதேவன் அடியில் வருமாறு சொன்னான்), எ-று.        (1)

814. வாம மேகலை மயிலஞ் சாயலார்
    காமக் கோட்டியுட் கழுமுங் காதலாற்
    சேம நல்லறஞ் செப்பிற் றீயிடை
    யாமை போலவ னவல மெய்துமே.

     (இ-ள்.)      வாமம்       -     அழகிய,      மேகலை -
மேகலாபரணத்தையணிந்த,   மயில்   - ஆண்மயில் போன்ற, அம் -
அழகிய,   சாயலார் - சரீரச்சாயலையுடைய ஸ்த்ரீமார்களின், காமம் -
விருப்பம்   பொருந்திய,   கோட்டியுள்  - கூட்டத்தினுள், கழுமும் -
பொருந்துகின்ற,     காதலால்    -    மிகுதியான     வாஞ்சையை
யுடைத்தானவனாகையினால்,     சேமம்     -         க்ஷேமத்தை
யுண்டுபண்ணுகின்ற,   நல்லறம்   -   ஸ்ரீஜின தருமத்தை, செப்பில் -
அவனிடத்தில் சொல்லுமிடத்தில், தீயிடை - அக்கினியிலே அகப்பட்ட,
ஆமைபோல   -  ஆமையைப்போல, அவன் - அவ்விரத்தினாயுதன்,
அவலம் - வருத்தத்தை, எய்தும் - அடைபவனாயின், எ-று.      (2)

815. அரசு மின்பமுங் கிளையு மாயுவும்
    விரைசெய் தாரவன் வீயு மென்றெணான்