வரையோ டெற்றவும் வட்ட மாதிகள்
பொரவும் வாதகா யங்கள் பொன்றுமே.
(இ-ள்.) திரை - அலையினால், அலைப்பவும் - அலசலாலும்,
தீயில் - அக்னியில், காய்ச்சவும் - காய்ச்சுவதினாலும், தரை -
பூமியை, நனைப்பவும் - ஜலத்தைப் பாய்ச்சி நனைப்பதனாலும் நீருயிர்
- அப்காய ஜீவன்கள், சாங்கள் - மரணமடையும், வரையோடு -
பர்வதங்களோடு, எற்றவும் - மோதுதலாலும், வட்டமாதிகள் -
சுழற்காற்று முதலியவைகள், பொரவும் - அடிப்பதினாலும், வாத
காயங்கள் - வாதகாய ஜீவன்கள், பொன்றும் நாசமெய்தும்,
எ-று. (13)
826. வெயிலும் மாரியும் மிக்க வாதமு
மயில்செய் வெம்படைத் தீயோ டாதியாற்
பயிர்ம ரம்முதல் பசிய காயமா
முயிர்க ணொந்துவெந் துயரு ழக்குமே.
(இ-ள்.) தீயோடு - தீயுடனே, மிக்க மிகுதியாகிய, வெயிலும் -
வெய்யிலினாலும், மாரியும் - மழையினாலும், வாதமும் - காற்றினாலும்,
அயில் செய் - கூர்மை பொருந்திய, வெம் - கொடுமையான, படை
ஆதியால் - ஆயுதங்கள் முதலியவைகளினாலும், பயிர் - நெற்பயிர்,
மரம் முதல் - விருக்ஷங்கள் முதலாகிய, பசியகாயமாமுயிர்கள் -
பசுமையான காயத்தையுடைய வனஸ்பதிகாய ஜீவன்கள், நொந்து -
வருந்தி, வெம் - கொடுமையான, துயர் - துக்கங்களை, உழக்கும் -
அனுபவித்து நாசமாகும், எ-று. (14)
827. மால்க டற்பிறந் தாலு மாவதென்
மேலை வெவ்வினை நிற்கு மாய்விடின்
வால்வ ளைமக ரங்க்ள் சிப்பிமீன்
கால னன்னவர் கையின் மாயுமே.
(இ-ள்.) வால் -வெளுப்பாகிய, வளை - சங்குகளும், மகரங்கள்
- மகர மீன்களும், சிப்பி - சிப்பிகளும், மீன் - மற்றும் அனேகவித
மஸ்யங்களும், மால் - பெரிதாகிய, கடல் - ஸமுத்திரத்திலே,
பிறந்தாலும் - உற்பவித்தாலும், மேலை முன்னாலாகிய, வெல்வினை
- வெவ்விதாகிய பாபவினையானது, நிற்குமாய்விடில் - இருந்து
உதயஞ் செய்யுமானால், ஆவது - (அவற்றிற்கு) ரக்ஷணையாவது, என்
- என்ன இருக்கின்றது, காலனன்னவர் - எமராஜனுக்குச் சமானமாகிய
கொலைஞர்களுடைய, கையின் - கையினால், மாயும் - அவை
மரணமடையும், எ-று. (15)
828. மலையும் வாவியும் கானு மேவியும்
வலையும் வில்லும்வான் பொறியு மாதியா |