யலைசெய் வார்களுக் கஞ்சி நெஞ்சழிந்
துலைவி லாதவெந் துயரு ழக்குமே.
(இ-ள்.) (இன்னும் விலங்கு கதியைச்சார்ந்தவைகள்), மலையும் -
பர்வதங்களிலும், வாவியும் - தடாகங்களிலும், கானும் - காடுகளிலும்,
மேவியும் - பொருந்தியும், வலையும் - வலைகளும், வில்லும் -
விற்களும், வான் - பெரிதாகிய, பொறியும் - எந்திரங்களும், ஆதியாய்
- முதலாக (மற்ற கொலைக்கருவிகளால்), அலைசெய்வார்களுக்கு
பிடித்துக்கொல்கின்றவர்களுக்கு, அஞ்சி - பயந்து, நெஞ்சழிந்து -
மனங்கலங்கி,. உலைவிலாத - நீங்காத, வெந்துயர் - வெப்பம்
பொருந்திய துக்கத்தை, உழக்கும் - அனுபவிக்கும், எ-று. (16)
829. ஊன காரரும் போர்செய் வீரருந்
தீஞர் வேள்வியுந் தீய தெய்வமு
மீன மானவ ராதி யெய்துவர்
தானு டம்பிடுஞ் சார்ந்த சாதியே.
(இ-ள்.) ஊனகாரரும் - மாமிசந் தின்பவர்களும் விற்பவர்களும்,
போர்செய் - யுத்தஞ் செய்கின்ற, வீரரும் - வீரபடர்களும், தீஞர் -
அஞ்ஞானிகளால் செய்யப்படும், வேள்வியும் - யாகமும்,
தீயதெய்வமும் - துர்த்தேவதைகளும், ஈனமானவர் - சாண்டாளாதி
தாழ்ந்த ஜாதியாரும், ஆதி - முதலாக, எய்துவர் - இன்னும்
பலவிதமாக அடைந்திராநின்ற பாபிஷ்டர்களினால், சார்ந்த சாதி -
விலங்கினத்தைச் சேர்ந்த ஜீவன்கள், உடம்பிடும் - சரீரத்தைவிட்டு
மரணமடையும், எ-று.
தான் - அசை. (17)
830. கூரி ரும்பினாற் குடுமி போழவும்
பார மேற்றவும் பாதம் யாப்பவும்
வார ணந்துய ரெய்து மற்றைய
வேரு மூர்தியு மீர்த்து நையுமே.
(இ-ள்.) வாரணம் - பெரிய மிருகமாகிய யானைகள், கூர் -
கூர்மை பொருந்திய, இரும்பினால் - இரும்பினாற் செய்யப்பட்ட
அஞ்குச முதலான ஆயுதங்களினால், குடுமி - மஸ்தகங்களில்,
போழவும் - பாகர்கள் பிளக்கவும், பாரம் - மிகுதியான சுமைகளை,
ஏற்றவும் - மேலே சுமக்கும்படி ஏற்றுதலாலும், பாதம் - கால்களை,
யாப்பவும் - தொடரிட்டுக் கட்டுதலாலும், துயரெய்தும் -
துக்கத்தையடையும், மற்றைய - மற்ற மாடு குதிரை முதலிவைகள்,
ஏரும் - உழுபடையையும், ஊர்தியும் - வண்டி முதலியவைகளையும்,
ஈர்த்து - இழுத்து, நையும் - நாசமெய்தும், எ-று. (18) |