390மேருமந்தர புராணம்  


 

(இ-ள்.)   உள்ளம்    -     மனதும்,   மெய்  - காயமும், மொழி -
வசனமும்,    ஒன்றுதலும்   இலா   - (ஒரு தன்மையாக ஞானத்தில்)
பொருந்துதலில்லாத,    வெள்ளை     மாந்தரும்     -   அறிவற்ற
அஞ்ஞானிகளாகிய மனிதரும், விலங்கிடை - திரியக் ஜாதியில், வீழ்வர்
- விழுவார்கள்,  தள்ளவாரம் - செய்ய வேண்டிய தருமப் பகுதிகளின்
அப்பங்கை,   செயா - செய்யாமல், தனந்தேடும் - செல்வந்தேடுகின்ற,
கள்ளம்    - கபடமாகிய  நெஞ்சினர் - மனதையுடையவர்கள், வீழ் -
விழுகின்ற,  கதியும்   -  கதியும், இதே - இவ்விலங்கு கதியேயாகும்,
எ-று.                                                  (21)

834. மன்றி னின்று பிறன்பொருள் வாங்குவார்
    தின்று தேனொடு கட்புல சிற்செல்வார்
    நின்ற நீதி கெடுத்தய லார்மனை
    யொன்று வாருழ லுங்கதி யும்மிதே.

     (இ-ள்.)        மன்றில்      நின்று    -     நீதிதலத்தில்
அதிகாரவர்க்கத்தினராய் நின்று, பிறன் - அன்னியனுடைய, பொருளை
- திரவியாதிகளை, வாங்குவார் - வாங்கிக் கொள்பவரும் தேனொடு -
தேனோடு,  கள் - கள்ளையும், புலைசில் - மாமிசத்தையும், தின்று -
பொசித்து,  செல்வார் - செல்கின்றவர்களும், நின்ற - பாரம் பரியமாய்
நின்ற,   நீதி  - நீதியை, கெடுத்து - நாசஞ்செய்து, அயலார் மனை -
பிறர்  மனையாளை,    ஒன்றுவார் - பொருந்துபவர்களும், உழலும் -
சுழல்கின்ற,   கதியும்    - கதியும், இது - இவ்விலங்கு கதியேயாகும்,
எ-று.                                                  (22)

835. ஒன்ற லாதுயி ரில்லை யெனச் சொலா
    நின்ற தீநெறி யிற்செறி வார்களு
    மொன்று நல்வழக் கோர்ந்துடைந் தானுழை
    வென்றி யாக்குநர் வீழ்கதி யும்மிதே.

     (இ-ள்.)   ஒன்றலாது  - பரமாத்மா ஒன்றேயல்லாமல், உயிர் -
ஜீவாத்மாக்கள்,     இல்லை  -       வேறில்லை,        (எல்லாம்
அப்பரமாத்மகலையே),   என - என்று, சொலாநின்ற - சொல்லுகின்ற,
தீநெறியில்         - நன்மையில்லாத    வழியில், செறிவார்களும் -
சேர்பவர்களும், ஒன்றும் - பொருந்தும்படியான, நல்  - நன்மையாகிய,
வழக்கு      - வழக்கின்    கூறுபாட்டை, ஓர்ந்து - தெரிந்திருந்தும்,
உடைந்தானுழை    - கெட்ட    வழக்காளியின்  பட்சமாகச் சேர்ந்து,
வென்றியாக்குநர்   - வெற்றியாக்கு கின்றவர்களும், வீழ் - விழுகின்ற,
கதியும் - கதியும், இது - இவ்விலங்குகதியாகும், எ-று.          (23)

836. இல்லை நல்வினை தீவினை யின்னுயி
    ரில்லை யேயிறந் தார்கள் பிறத்தலு