யானையானது, கேளா - கேட்டு, பிறப்பினை - தனது பூர்வபவ
பிறப்பை, உணர்ந்திட்டு - (க்ஷயோபசமலப்தி பூர்வம் விசோதிலப்தியால்
பவஸ்மிருதியென்னும் அறிவுண்டாகவதனால்) அறிந்து, ஊனின்
விரவிய - மாம்ஸத்திற் கலந்த (அதாவது : மாம்ஸமிசிரமாகிய), கவளம்
- கவளத்தை, கொள்ளாது - ஏற்றுக்கொள்ளாமல், ஒழிந்து -
அதைவிட்டு நீங்கி, வெய்துயிர்த்தது - பெருமூச்செறிந்து நின்றது,
எ-று. (26)
839. பிறர்மனை பிழைத்த நெஞ்சிற் பெரியவ னொருவன் போல
நிறைமதம் புலர்ந்து நைந்து நீசனென் செய்தே னென்று
மறமொழிந் துறவி யோம்பிக் கவளங்கள் வாங்கா நீங்க
வறைகழ லரசற் கோடி யறிந்தவ ருணர்த்தி னாரே.
(இ-ள்.) (அவ்வாறாய் அந்த யானை), பிறர் மனை - அன்னிய
ஸ்த்ரீயினிடத்தில், பிழைத்த - குற்றஞ் செய்த (அதாவது : நீதி
விரோதஞ்செய்து அவளை அனுபவித்த), பெரியவனொருவன்போல -
ஒரு பெரிய மனுஷ்யனைப்போல (அதாவது : பெரிய
மனுஷ்யனானவன் தான்செய்த அக்காரியம் கெட்டவிஷயமென்று
அறிந்து தன்னைத்தானே நிந்தித்து அதற்குப் பிராயச்சித்தம் செய்து
கொள்வதுபோல) நிறை - நிறைந்த, மதம் - மதமானது, புலர்ந்து -
உலர்ந்து (அதாவது : ஒழிந்து), நீசன் - புத்தியில்லாத நீசனாகிய யான்,
என்செய்தேனென்று - என்ன கெட்ட காரியத்தைச் செய்தேனென்று,
நெஞ்சில் - மனதில், நைந்து - நினைந்துருகி (ஆத்மநிந்தனை
பண்ணி), மறம் - பாபத்தொழிலை, ஒழிந்து - தவிர்ந்து, உறவி -
ஜீவன்களை, ஓம்பி - இரக்ஷித்து (அதாவது : ஹிம்ஸைபண்ணாமல்,
ஜீவதயவுடையதாகி), கவளங்கள் - மாம்ஸ மிஸ்ரமாகிய கவளங்களை,
வாங்காநீங்க - வாங்காமல் விட்டுவிட, அறிந்தவர் - இது
கவளங்கொள்ளாதிருப்பதை யுணர்ந்த பாகர்கள், ஒடி - சென்று, அறை
- சப்தியா நின்ற, கழல் - வீரகண்டயத்தை யணிந்த, அரசற்கு -
இரத்தினாயுத மஹாராஜனுக்கு, உணர்த்தினார் - யானை
கவளங்கொள்ளவில்லையென்று தெரிவித்தார்கள், எ-று. (27)
840. மன்னன்வந் தமைச்ச ரோடு மருந்தறி புலவர் தம்மை
யென்னிதற் குற்ற தென்ன வியாதிமற் றியாது மில்லை
மின்னுமிழந் திலங்கும் பூணோய் விலங்கல்போ னின்ற வேழ
முன்னினாற் பிறப்பு ணர்ந்த தொக்குமிவ் வுயிர்ப்பி னென்றார்.
(இ-ள்.) மன்னன் - இரத்தினாயுதவாசன், அமைச்சரோடும் -
மந்திரிகளுடன், வந்து - யானை யிருக்குமிடம் வந்து, மருந்தறிபுலவர்
தம்மை - வைத்தியர்களை, என் - என்ன, இதற்குற்றது - இந்த
யானைக்கு அடைந்தது, என்ன - என்று கேட்க (அவர்கள்), மின் -
பிரகாசத்தை, உமிழ்ந்து - சொரிந்து, இலங்கும் - |