விளங்கும், பூணோய் - ஆபரணமணிந்த அரசனே!, விலங்கல்போல் -
பர்வதம்போல, நின்ற - நின்றதாகிய, வேழம் - இந்த யானைக்கு,
யாதும் - யாதொன்றும், வியாதி - நோயானது, இல்லை -
உண்டானதில்லை, இவ்வுயிர்ப்பின் - இது விடுகின்ற இப்பெருமூச்சின்
தன்மையால், உன்னினால் - யுக்தியாக ஆலோசித்துப் பார்த்தால்,
பிறப்பு - ஏதோ காரணத்தால் பூர்வபவ பிறப்பை, உணர்ந்ததொக்கும் -
அறிந்ததற்குச் சமானமா யிராநின்றது, என்றார் - என்று
சொல்லினார்கள், எ-று. (28)
841. ஐயொடு வாத பித்தம் விகாரத்தை யடைந்த தில்லை
மையலும் வெய்ய தொன்று மற்றிதற் குற்ற தில்லை
கைம்மலை யிதன்கை யூனிற் கவளங்கள் வைத்த போழ்தி
னையமொன் றின்றி வாங்கி னறிந்தது பிறப்பை யென்றார்.
(இ-ள்.) (அவர்கள் அவ்வாறு சொல்லிப் பின்னரும்), ஐயொடு -
சிலேத்து மத்தோடு, வாதம் - வாதமும், பித்தம் - பித்தமுமென்னும்
பகுதிகள், விகாரத்தை - வித்தியாசத்தை, அடைந்ததில்லை - அடைந்த
தன்மை இதனிடத்தில்லை, வெய்யது - கொடுமையுள்ளதாகிய, மையல்
ஒன்றும் - மயக்கமொன்றும், இதற்கு - இவ்வியானைக்கு, உற்றதில்லை
- அடைந்ததில்லை, கைமலை - துதிக்கையையுடைய மலைபோன்ற
யானையாகிய, இதன்கை - இதனுடைய கையில், ஊனில் - மாம்ஸ
மிஸ்ரமில்லாத, கவளங்கள் - பவித்திராஹார கவளங்களை,
வைத்தபோழ்தில் - வைத்தகாலத்தில், ஐயமொன்றின்றி - சிறிதும்
சந்தேகமில்லாமல், (இது), வாங்கின் - கிரஹித்துப் பொசிக்கின்,
பிறப்பை - தனது பிறப்பாகிய பூர்வ பவ ஸ்வரூபத்தை, அறிந்தது -
பவஸ்மிருதி யென்னும் ஞானம் உற்பன்னமாகித்
தெரிந்துகொண்டதாகும், என்றார் - என்று சொன்னார்கள்,
எ-று. (29)
842. தேனுலாந் தாரி னானு மப்படிச் செய்த வென்ன
வூனிலாத் தூய நல்ல கவளங்க ளுழையர் நீட்ட
மானமா வாங்கக் கண்டு மன்னனும் வியந்து பின்னைக்
கானின்மா முனிவன் றன்னைக் கண்டடி பணிந்து சொன்னான்.
(இ-ள்.) (அதைக்கேட்டு), தேன் - வண்டுகள், உலாம் -
தேனையுண்ணும் பொருட்டு நெருங்கியுலவுகின்ற, தாரினானும் -
மாலையை யணிந்தவரசனும், அப்படி - அப் பிரகாரம், செய்க -
செய்யக்கடவீராக, என்ன - என்று ஆஜ்ஞாபிக்க, ஊனிலா -
மாமிசமில்லாத, தூய - பரிசுத்தமாகிய, நல்ல - நலமான, கவளங்கள் -
அன்னக் குவியல்களை, உழையர் - வேலைக்காரர்களாகிய பாகர்கள்,
நீட்ட - கொடுக்க, மானம் - அபிமானத்தையுடைய, மா -
அவ்வியானையானது, வாங்க - வாங்கிப் புசிக்க, கண்டு - அதைப்
பார்த்து, மன்னனும் - அரசனும், வியந்து - ஆச்சரியமடைந்து,
பின்னை - பிறகு, கானில் - மனோஹரமென்னும் உத்தியானத்தில்
இராநின்ற, |