|  
       என்ன     -   என்று   கேட்க, பவித்திரமுனியும்   - பரிசுத்தனான 
        அப்பிரீதிங்கர    முனிவனும்,   பைம்பொன்   - பசுமை பொருந்திய 
        பொன்னாபரணங்களையணிந்த,   கணிகை   பால் - தாசியினிடத்தில், 
        பட்ட வெல்லாம் - உண்டானவைகளை யெல்லாம், (அதாவது : அவள் 
        தர்மங்கேட்டது    விரதங்கொண்டது    முதலியவைகளே யெல்லாம்), 
        விரித்துரைப்ப - விளக்கிச் சொல்ல, கேட்டு - அதைக்கேட்டு, உடன் - 
        அப்பொழுதே,  வியந்து   - விசித்திர மதி (முனிவன்) ஆச்சரியமுற்று, 
        வெய்துயிர்த்து   -  பெருமூச்சு விட்டு, வேட்கை - காமவிருப்பமானது, 
        உருத்தெழ - தனக்குள் உருவமுற்று அதிகமாக உண்டாக, இருக்கை - 
        அப்பட்டணத்தில்  அவளிருக்கும் இடத்தையும், நாமம் - பெயரையும், 
        உருவமும்  - ரூபத்தையும், தெரிய - விளங்கும்படியாக, கேட்டான் - 
        அவனிடம் வினவினான், எ-று. 									                            (42)	 
      855.	வினையின தெழுச்சி தன்னால் வேதனை வசத்த னாகி 
             முனியவன் றனிய னாகிப் பாரணைக் கென்று போனான் 
             றனதிடங் குறுகக் கண்ட தையலா ளுவந்து சால 
             விநயத்தி னிறைஞ்சிக் கேட்டாள் விரதத்தின் பலனை யன்றே.	 
           (இ-ள்.)    வினையினது  -  கருமத்தினது, எழுச்சி தன்னால் - 
        உதயத்தினாலே,  (மேற் கூறியபடி),  வேதனை  - காம வேதனையின், 
        வசத்தனாகி    -   வசமானவனாகி, முனியவன்   -  அவ்விசித்ரமதி 
        முனிவனானவன், தனியனாகி - தனியானவனாய், பாரணைக்கென்று - 
        ஆஹாரங்கொள்ளப்   போக வேண்டுமென்று, போனான் - (மறுநாள் 
        சரியா    மார்க்கமாக    மாயாச்சாரமாய்ப்)   போனான், (அவ்வாறு 
        சென்றவன்),   தனதிடம்   - தன்னுடைய வீட்டை, குறுக - அடைய, 
        கண்ட    - பார்த்த, தையலாள்  - அந்தப் புத்தி ஷேனையென்னும் 
        கணிகையானவள்,   உவந்து   -    ஸந்தோஷித்து, சால - மிகவும், 
        விநயத்தின்    -   மரியாதையாக, இறைஞ்சி    - வணக்கஞ்செய்து, 
        விரதத்தின்    -  முன்னாள்தான் கொண்ட விரதத்தினது, பலனை - 
        பிரதிபலனாகுந்     தன்மையை,     கேட்டாள்     - (அவனிடம்) 
        வினாவுதலுற்றாள், எ-று.											                                (43)	 
      856.	மோகரா கத்த வாய கதைகளை முனிவன் சொல்லப் 
             போகரா கத்த வார்த்தைப் புதியனோ முனிவ னென்று 
             நாகரா கத்திற் கெட்டார் கதைகளை நவிற்றப் பின்னும் 
             வேகரா கத்த னாக மெல்லியல் வெறுப்பச் சொன்னாள்.	 
         (இ-ள்.)    (அவள்    அவ்வாறு   வினவியதற்கு), முனிவன் - 
    விசித்திரமதி    முனிவன்,  மோகராகத்தவாய - மோகவாஞ்சையாகிய, 
    கதைகளை    -   சரிதங்களை, சொல்ல - வசனிக்க, (புத்திஷேனை), 
    போகராகத்த  - காமபோக வாஞ்சையாகிய, வார்த்தை - வசனத்தைப் 
    பேசுகின்ற,    முனிவன்   -    இம்முனிவன், புதியனோ   - நேற்று 
    வந்தவனன்றிப்   புதியவனோ?, என்று - என்று நினைத்து, (அவனை 
    உற்று  |