402மேருமந்தர புராணம்  


 

மற்ற  காம இன்பஹேதுக்களாகும், அன்றி - அப்படியல்லாமல், (ஸ்திரீ
புருஷர்    சேரின்),     இது   - இக்காம அனுபவமானது, பிணம் -
பிரேதத்தோடொக்கும்,   (ஆதலின்,   விருப்பமற்ற   என் உறவை நீ
விரும்புவது  வெறுக்கத்தக்க செய்கையாகும், இதை நீ விட்டுவிடுவாய்
என்று    சொன்னாள்;    அதற்கவன்,   பெண்ணே!     பிணத்தின்
சேர்க்கையிலும்   இன்பமேயிருக்கின்றது;     ஆதலின்), பிணத்தைச்
சேர்ந்தால்   - அப்படியாகிய பிரேதேத்தைக் கூடினால், பிழைத்தது -
தவறான   காரியமானது, என்   - என்ன,  அணையுமேல் - ஒருவன்
அப்பிணத்தைக் கூடுவானானால், பெரிய இன்பம் - அதுவே பெரிதான
சுகம், என்ன - என்று சொல்ல, அவள் - அக்கணிகையானவள், சால
- மிகவும்,  சுளிந்து   - முகங்கடுத்து, வெறுத்து - இம்முனியின்மேல்
வெறுப்பையடைந்து,   போனாள்   - பேசாமல் விலகிப் போயினாள்,
எ-று.                                                 (46)

859. மாலைசாந் தெண்ணெய் சுண்ணம் மஞ்சள்வான் கலிங்கம் வேறாச்
    சாலநா ளிருக்கி னுந்தங் குணஞ்செவ்வி யழிந்தி டாவா
    மூனுலா முடம்பைச் சேர்ந்தா லொருகணத் தழியும் வண்ணம்
    வானெலாம் வணக்குஞ் சீல மாய்தலெண் ணாது சொன்னான்.

     (இ-ள்.) மாலை  - புஷ்பமாலையும், சார்ந்து - சந்தனாதிகளும்,
எண்ணெய் - வாசனை யெண்ணெயும், சுண்ணம் - கதம்பத்தூள்களும்,
மஞ்சள்  - மஞ்சளும், வான் - அழகிய, கலிங்கம் - பட்டு - வஸ்திர
முதலானவைகளும்,   வேறா  - தனியாக,   சாலநாள் - வெகுகாலம்,
இருக்கினும்  - இருந்தாலும், தம் - அவைகளுடைய, செவ்விகுணம் -
அழகும்       ஸ்வபாவமாகிய    குணமும்,      அழிந்திடாவாம் -
கெடாதவையாகும், ஊனுலாம் - மாம்ஸாதிகள் வியாபித்த, உடம்பை -
சரீரத்தை,  சேர்ந்தால் - அடைந்தால், ஒரு கணத்து - அடைந்த ஒரு
ஸமயகாலத்துள்,   அழியும் - குணம் கெட்டு விபாவமடைந்து போம்,
வண்ணம்   -    இந்த   விதத்தையும், (மோகத்தால்), வானெலாம் -
தேவர்களெல்லாம்,    வணங்கும்    -  வணங்கும்படியான, சீலம் -
சீலாச்சாரமானது,    மாய்தல்     -     நாசமாகிக்  குணம் கெட்டு
விபாவமடைவதையும், எண்ணாது - மனதில் ஆலோசிக்காமல், (இந்த
விசித்திரமதி   முனிவன்),    சொன்னான்    - (கணிகையினிடத்தில்
காமானுபவமாய்ச்      சேருவோம்,     நீ     இசைவாயாக என்று
தன்னிலைமைக்குத்    தகாத     வார்த்தையைச்)    சொல்லினான்,
எ-று.                                                 (47)

860. மோகத்தால் முடையு டம்பின் நாற்றத்தை முனித லின்றிப்
    போகத்தாற் கழுமி நிற்கும் புல்லறி வாள ராகுஞ்
    சேகற்கா முடையு டம்பைச் சேர்தன்மற் றொன்று மென்றிட்
    டாகத்தா னினைக்க மாட்டா தருந்தவத் திழிந்து நின்றான்.

     (இ-ள்.)    (மேலும்)      மோகத்தால்     -    மோஹினீய
பரிணாமோதயத்தால்,    முடை    - துர்க்கந்தமுடைய, உடம்பின் -
சரீரத்தினது, நாற்றத்தை - அத்துர்க்