லாகிய, ஆசையை - ராகத்தை, போகவிட்டு - பேத பாவனை பண்ணி
நீக்கி, வெறுத்து - அவ்விந்திரிய விஷய போகங்களில் விராகமுற்று,
எழும் - சுத்தாத்தும ஸ்வரூபத்தில் உண்டாகிய, மனத்தராகில் -
ஏகாக்கிர சித்தத்தராகினால் (அவர்கட்கு), வீட்டின்பம் - மோட்ச
சௌக்கியம், விளையும் - உண்டாகும், அன்றி - அப்படியில்லாமல்,
(அவர்கள்). மறுத்து - அதனைத் தடைசெய்து, எதிராகச் செல்லின் -
அதற்கு விரோதமாக இந்திரிய விஷய போகங்களில் ராகமுற்றுச்
சென்றால், மாற்றிடை - சம்ஸாரத்தில், சுழல்வர் - சுழலுவார்கள்,
என்னும் - என்கின்ற, திறத்தினை - சுருதஞான விதத்தை,
நினைத்தலில்லான் - எண்ணாதவனாகி, சீலத்தின் -
சீலாச்சாரத்தினின்றும், இழிந்து - நழுவி, சென்றான் - தாழ்ந்த
ஸ்திதியிற் புகுந்தான், எ-று. (50)
863. உண்டுநாம் விட்ட வல்லா வுருவில்லை யுலகத் தின்கண்
வண்டுலாங் கூந்த லாகி மாசெலாந் திரண்ட தன்றிக்
கண்டதொன் றில்லை காமங் கண்ணினைப் புதைத்த காலத்
துண்டுநாம் விட்ட வாசை யுவர்த்துமென் றுணர்வி லாதான்.
(இ-ள்.) நாம் - சேதனாஸ்வரூபமுள்ள ஆத்மனாகிய நாம்,
உண்டு - அனாதியாகவே அசுத்தசேதனையால் அனுபவித்து,
விட்டவல்லா - நீக்கப்பட்டதல்லாத, உருவு - புத்கல பதார்த்தமானது,
உலகத்தின் கண் - லோகத்திலே, இல்லை - கிடையாது (அதாவது :
உலகத்துள்ள சகல புத்கலங்களையும் ஆத்மன் அசுத்த
சேதனையினால், பாவகர்ம, திரவியகர்ம, நோகர்மத்தால் பந்தித்து
நின்றதேயாகும், ஆதலின் இதைக்கொண்டு ஆராயுமிடத்து),
உலகத்தின்கண் - இவ்வுலகில், (ஸ்த்ரீரூபமானது), வண்டு -
வண்டுகளானவை, உலாம் - உலாவும்படியான, கூந்தலாகி -
அளகத்தை யுடையதாகி, மாசெலாம் - துர்கந்தமுள்ள
அணுத்திரள்களெல்லாம், திரண்டதன்றி - ஸ்கந்தரூபமாகப்
பரிணமித்ததன்றி, (இதில்),கண்டதொன்றில்லை - பார்த்தது வேறொன்று
மில்லை, (ஆதலின்), காமம் - காமராகமானது, கண்ணினை -
ஆத்மனது தர்சனத்தை, புதைத்தகாலத்து - மறைத்த அக்காலத்து,
உண்டு - அனேகவாரம் அனுபவித்து, நாம் - நம்மால், விட்ட -
விடப்பட்ட, ஆசை - இக்காம வாஞ்சையை, உவர்த்துமென்று -
வெறுப்போமென்று, உணர்விலாதான் - இந்த விசித்ரமதி முனிவன்
ஆலோசித்தல் இல்லாதவனாகினான், எ-று. (51)
864. விலையிலா வாச மாலை தூமத்தால் வேய்ந்த கூந்தற்
றலையினின் றிழிந்த காலைத் தான்றுறந் திட்ட தேபோல்
மலையன தவத்து வேடங் கண்டுமுன் வணங்கி மாண்ட
நிலையினின் றிழியப் பின்னை நேரிழை யிகழ்ந்திட் டாளே.
(இ-ள்.) விலையிலா - விலை மதிப்பில்லாத (அதாவது : அதிக
விலையுள்ள), வாசம் - வாசனைகளையுடைய, மாலை -
புஷ்பமாலையானது, தூமத்தால் - அகிற்றூப |