408மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.) இலை     -     (கம்மியரால்     அமைக்கப்பெற்ற),
இலைக்கொடிகள்,  குலாம் - பிரகாசிக்கும், மகரம் - மகரவடிவமாகிய,
பைம்  - பசுமை பொருந்திய பொன்னாலாகிய, பூண் - ஆபரணத்தை,
ஏந்தும்   -   தரித்த, தோள் - கைகளையுடைய, வேந்த - அரசனே!,
நிலையிலா - நிச்சயமில்லாமல் கெடுகின்ற, போகம் - இந்திரிய விஷய
போகங்களை,  மேவி நின்று - பொருந்தி நின்று, நல் - நன்மையாகிய,
அறத்தை    - தர்ம     ஸ்வரூபமாகிய ஆத்ம ஸ்வரூப பாவனையை,
(அறிந்து பற்றாமல்), நீங்கல் - அதற்கு பகிர்முகமாக அசத் பூதங்களில்
மயங்கிச்   செல்லுதல், (எப்படிப்    பட்ட ஸ்வரூபமுடையதென்றால்),
விலையிலா  - விலையிடுதலில்லாத (அதாவது : மேலான விலையுள்ள),
மணியை - இரத்தினத்தை, விட்டு - குணமறியாமல் விட்டு, காசத்தை -
காய்ச்சு    மணியை, மேவல்    -    பொருந்துவதாகும்,   அன்றி -
அதுவல்லாமலும்,    தலைவனாய் - குடும்பத் தலைவனாகி, தாயை -
மாதாவை,    விட்டு    -   ரக்ஷிக்காமல் விட்டு, தன் - தன்னுடைய,
அடியாளை  - பெண்சாதியை மாத்திரம், ஓம்பல் - இரக்ஷிப்பதுமாகும்,
என்றான் - என்றும் சொன்னான், எ-று.                     (58)

871. கடலெனத் தோன்று நீலக் கானலை நீரென் றோடி
    யுடலிழந் துழையைப் போல வுறுதியொன் றோர்வ தின்றி
    யிடரினை யீனு மின்னாப் பயில்புலத் திவறிச் சென்றேன்
    படுதுயர் நரகந் தன்னிற் பதைப்பனோ வடிக ளென்றான்.

     (இ-ள்.) (இவற்றைக்  கேட்டு இரத்தினாயுதவரசன்), கடலென -
சமுத்திரம்போல,  தோன்றும் - தோற்றுகிற, நீலக்கானலை - நீல நிறம்
பொருந்திய பேய்த்தேரை, நீரென்று - ஜலமென்று, (நினைத்து), ஓடி -
சென்று,    உடலிழந்த .  சரீரம்    விடுகின்ற,   உழையைப்போல -
மானைப்போல,  உறுதி - ஆத்மனுக்கு உறுதியாகிய, ஒன்று - ஒப்பற்ற
ஆத்ம    குணத்தை,  ஓர்வது - அறியுந்தன்மை, இன்றி - இல்லாமல்,
(அஞ்ஞானத்தால்),    இடரினை   -    துன்பத்தை, ஈனும் - உண்டு
பண்ணுகின்ற,     இன்னா     -     பொல்லாங்கினையே, பயில் -
பற்றியிருக்கின்ற,    புலத்து - பஞ்சேந்திரிய விஷ்யங்களில்,  இவறி -
மிகுதியாக இச்சித்து, சென்றேன் - அப்பிரசஸ்தராகத்தில்  மிகுதியாகச்
சென்றேன்,    (ஆகையால்),    அடிகள்   - ஸ்வாமிகளே!,   (அந்த
அசுபோபயோக    பரிண    மனத்தால் பாபாஸ்ரவபந்தமாகி   அந்த
பாபோதயத்தால்),     படு     -   மிகுதியாக உண்டாகின்ற, துயர் -
துக்கங்களையுடைய,    நரகந்தன்னில்  - நரகத்தில்,  பதைப்பனோ -
(நரககதி நாமோதயத்தால் ஜனித்து) துன்பமடைவேனோ?,  என்றான் -
என்று கேட்டான், எ-று.

     இழந்த உழையென்பது இழந்துழையெனத் தொகுத்தலாயிற்று. (59)

872. எரியிடைப் பதங்கம் போன்று மிளம்பிடிக் களிறு போன்றுங்
    கரிமதத் தளியைப் போன்றுங் கானத்தி னசுணம் போன்றும்