426மேருமந்தர புராணம்  


 

907. கொற்றவேன் மன்னர் வேழ கும்பத்தைத் தழுவி வீழ்ந்தார்
    வெற்றிப்பொற் கொடியின் கொங்கை மேவினார் தம்மை யொத்தார்
    அற்றதோர் கேட கக்கை கவ்விய நரிகண் ணாடிப்
    பற்றிய குறளி செல்வா டன்முகம் பார்த்த போலும்.

     (இ-ள்.)  வேழகும்பத்தை  -  யானை   மஸ்தகத்தை, தழுவி -
கையாற்றழுவிக்கொண்டு,        வீழ்ந்தனர்     -    யுத்தகளத்தில்
விழுந்தவர்களாகிய,      கொற்றவேல்   மன்னர்   -   வெற்றியுள்ள
வேலாயுதத்தைத்    தாங்கிய அரசர்கள், வெற்றிப் பொற்கொடியின் -
ஜெயஸ்ரீயினது,   கொங்கை   -  ஸ்தனங்களை, மேவினார் தம்மை -
பொருந்தினவர்களை,    ஒத்தார்   -   ஒப்பாயினார்கள்,  அற்றது -
அறுப்புண்டு  விழப்பட்டதாகிய, ஓர் - ஒரு, கேட்கம் - கேடகத்தோடு
கூடிய,  கை - கையை, கவ்விய - கடித்து எடுத்துக்கொண்டுபோகின்ற,
நரி   - குள்ளநரியானது, கண்ணாடி பற்றிய - கண்ணாடியைக் கையில்
எடுத்த,  குறளி - குறுகிய வடிவுள்ள ஒரு தாதியானவள், செல்வாள் -
நடப்பவளாய்,   தன்    முகம்  - தனது முகத்தை, பார்த்தபோலும் -
பார்க்கின்றதற் கொப்பாகும், எ-று.                           (17)

908. விழுந்துடன் கிடந்த வேழம் விட்டமூர்ச் சனைகள் பரந்தள்
     செழுங்குகைச் சிறிது போந்து சீறுவ தொக்கும் போரி
     னழிந்துடன் கிடந்த வீர ரருகுசென் னரியைக் கண்டு
     முழஞ்சிடை யுறங்குஞ் சிங்க முனிவதே போன்மு ரன்றார்.

     (இ-ள்.)  விழுந்து - யுத்தகளத்தில் விழுந்து, உடன் - உடனே,
கிடந்த  - சாகாமல் கிடக்கின்ற, வேழம் - யானைகள், விட்ட - நோய்
தாளாமல்   விடுகின்ற,    மூர்ச்சனைகள்  - நினைவு மயங்கிய பெரு
மூச்சுகள், பாந்தள் - சர்ப்பமானது, செழும் - செழுமையாகிய, குகை -
குகையினின்றும், சிறிது போந்து - கொஞ்சம் வெளியே வந்து, சீறுவது
- சீறுகின்ற   சப்தத்திற்கு,   ஒக்கும் - சமானமாயிருக்கும், போரில் -
சண்டையில்,   அழிந்து   -   உயிர் போகாமல் பலமழிந்து, உடன் -
உடனே, கிடந்த - விழுந்து கிடக்கின்ற, வீரர் - வீரபடர்கள், அருகு -
தங்கள்    பக்கத்தில்,   செல் - செல்கின்ற, நரியை - குள்ளநரிகளை,
கண்டு    -   பார்த்து,  முழஞ்சிடை - பர்வத குகையில், உறங்கும் -
தங்கியிராநின்ற,  சிங்கம் - சிம்மமனாது, முனிவதேபோல் - (சமீபத்துச்
செல்கின்ற இதர மிருகங்களைக்) கோத்து கர்ஜிப்பதுபோல,முரன்றார் -
கர்ஜித்தார்கள், எ-று.                                      (18)

909. வாசிக ளுலக்க வாளி பாய்ந்திட மனங்க லங்கி
     வீசின பாத மேலாய் விழுந்தன வருடை போன்ற
     பூசலிற் பொன்றும் வீரர் துறக்கமா மென்னும் பொய்ந்நூ
     லாசையாற் பொருது வீழ்ந்துரரம்பைய ரார்வத் தாலே.