(இ-ள்.) அச்சு - அச்சும், நீர் - ஜலமும், தேரொடு - இரதத்தையும்,
மீனை - மத்ஸியத்தையும், ஈர்த்திடும் - முறையே இழுக்கும், அச்சு -
இரதத்துக்கு அச்சும், நீர் - மத்ஸியத்துக்கு ஜலமும், இன்றி -
இல்லாமல், தேரும் - இரதமும், மீன் - மத்ஸியமும், செல்லா -
செல்லமாட்டா, அச்சு - இரதத்துக்கு அச்சும், நீர் - மத்ஸியத்துக்கு
ஜலமும், போல-, தன்மத்தி - தர்மாஸ்தி திரவியமானது, சேறலை -
(சீவபுத்கல மிரண்டுக்கும் கமனத்தை அதாவது) செல்கையை,
இச்சையும் - ஆசையும், முயற்சியும் - பிரயத்தனமும், இன்றி -
இல்லாமல், ஆக்கும் - செய்விக்கும், எ-று. (90)
91. அந்தரத் தறுபத்து மூன்ற தாகிய
விந்திர படலமும் நிரய மேழ்களும்
மந்தர மழைமண்ணு மற்று நின்றிடா
வந்தமி னிலையதன் மத்தி யில்லையேல்.
(இ-ள்.) அந்தமில் - முடிவில்லாத, நிலை - நிலைமையையுடைய, அதன் மத்தி - அதர்மாஸ்தி திரவியமானது, இல்லையேல் -
இல்லாமல் போகுமேயானால், அந்தரத்து - ஆகாயத்திலிராநின்ற,
அறுபத்து மூன்றதாகிய - அறுபத்து மூன்றாகிய, இந்திர படலமும் -
சுவர்க்கலோக படலங்களும், நிரயமேழ்களும் . ஏழ்நரகங்களும்,
மந்தரம் - மகம்மேருபர்வதமும், மலை - குலகிரி முதலாகிய
பர்வதங்களும், மண்ணும் - பூமியும், மற்றும் - இன்னும்
உள்ளவைகளும், நின்றிடா - நிலைத்திருக்க மாட்டா, எ-று. (91)
|
92. பறவையின் சிறகொடு பாத நின்றுழி
நெறியினாற் செலவொடு நிலையை யாக்குமா
லுறவிபுற் கலமிவை யோட னிற்றலைச்
செறிவுறித் தம்மதம் மத்தி செய்யுமே.
(இ-ள்.) பறவையின் - பக்ஷியினுடைய, சிறகொடு - இறகோடு,
பாதம் - கால்களும், நின்றுழி - இராநின்ற விடத்தில், நெறியினால் -
கிரமத்தினால், செலவொடு - இறகு செல்கையையும், நிலையை -
கால்கள் ஸ்திரதரத்தையும், ஆக்கும் - செய்யும், (அவைபோல்) உறவி
- சீவன்களும், புற்கலம் - புத்கலமும், (ஆகிய) இவை - இவைகள்,
ஓடல் - செல்கையையும், நிற்றலை - ஸ்திரதரத்தையும், செறிவுறி -
சேர்தலைப்பொருத்தி (அதாவது : செல்லவும் நிற்கவும்) இசைவித்து,
தம்மதம்மத்தி - தர்மாஸ்தி அதர்மாஸ்திகள், செய்யும் - செய்வனவாம்,
எ-று.
ஆக்குமால் என்பதில், ஆல் - அசை. (92)
93. அளவின்றி யத்தியா யமூர்த்தி யாதியா
யுளவென்ற பொருட்கெலா மிடங்கொ டுத்துடன் |