கேசவபக்ஷ ராஜராதி சைன்யங்கள், முதுகிட்டது - யுத்த பூமியினின்றும்
புறமுதுகு காட்டி ஓடின, மாற்றவன் - சத்துருவாகிய பிரதி
வாஸுதேவனுடைய, பக்கத்துள்ளார் - பக்ஷத்தி விராநின்றவர்களாகிய,
படைமன்னர் - சேனா வீரர்களாகிய அரசர்களும், ஆர்த்து -
ஜெயசப்தமிட்டு, எழுந்தார் - எழுப்பினார்கள், (அப்போது மேற்
கூறியவாறு சென்ற), மிடை நெருங்கிய, கதிர் - பிரகாசம் பொருந்திய,
ஆழி - சக்ராயுதமானது, மேரு - மஹாமேரு பர்வதத்தை, சூழ்வரும்
வலஞ் செய்கின்ற, பருதி போல - சூர்யனைப் போல, எ-று. (25)
இதுவும், அடுத்த செய்யுளும் குளகம். (25)
916. கேசவன் றன்னைச் சூழ்ந்து வலப்பக்கங் கெழுமக் கண்டு
பேசொணா வகையி னாழி பிடித்தவன் றிரித்து விட்டான்
மூசுதேன் கவசங் கீண்டு மொய்வரை மார்பு புக்குத்
தேசறத் துருவி யோடித் திசைவிளக் குறுத்த தன்றே.
(இ-ள்.) கேசவன் தன்னை - வாஸுதேவனாகிய விபீஷணனை,
சூழ்ந்து - பிரதக்ஷிணமாக வந்து, வலப்பக்கம் - அவனுடைய
வலப்பாரிசத்தில், கெழும - பொருந்தி நிற்க, கண்டு - அக்கேசவன்
பார்த்து, (ஸந்தோக்ஷித்து), பேசொணா வகையின் - சொல்வதற்கரிதான
சக்தி வாய்ந்த, ஆழி - அச்சக்ராயுதத்தை, அவன் - அவ்வாசுதேவன்,
பிடித்து - கையாற்பற்றி, (விதிபூர்வகம் தியானித்து), திரித்து - (மறுபடி
தனது தக்ஷிணஹஸ்த்தால்) திருப்பி, (பிரதி வாஸுதேவனான
சத்துருவின்மேல்), விட்டான் - ஏவினான், (அப்படி ஏவப்பட்ட
அச்சக்கராயுதமானது), மூசுதேவன் கவசங்கீண்டு - பிரதி வாஸுதேவ
னணிந்திராநின்ற அழகிய ஜீராவைப் பிளந்து, மொய் - பலம்
பொருந்திய, வரை - பர்வதம் போன்ற, மார்பு - அவனுடைய
மார்பினிடத்தில், புக்கு - புகுந்து, தேசு - அவனது ஒளியானது,
(அதாவது : உயிர்), அற - நீங்கும்படி, துருவி - துளைத்துக் கொண்டு,
ஓடி - கேசவனிடம் சென்று, திசை - திக்குகளிலெல்லாம்,
விளக்குறுத்தது - பிரகாசத்தை உண்டாக்கியது, (அதாவது :
கேசவனுக்கு ஜெயத்தை உண்டுபண்ணிற்று), எ-று. (26)
"தேசழித்துருவிக்கொண்டு" என்றும் பாடபேதமுண்டு.
917. கருமுகி லுருமி னோடிக் கேசவன் கையி னாழி
யுருமிடிப் புண்ட நீல மலையிலொன் னானை வீழ்ப்ப
விருள்பரந் திட்ட தெங்கும் யாவரும் நடுங்கி வீழ்ந்தா
ரொருவர்க ணின்ற துண்டோ திருவென வுரைத்திட் டாரே.
(இ-ள்.) (அவ்வாறு), கேசவன் - விபீஷணனுடைய, கையின் -
கையினின்றும், ஆழி - சக்ராயுதமானது, கரும் - கருத்த, முகில் - மேகத்தினின்றும் |