உண்டாகிய, உருமின் - இடியைப்போல, ஒடி - கர்ஜித்துக்கொண்டு
சென்று, உருமிடிப்புண்ட - இடியினாலே பிளந்து வீழப்பட்ட, நீலம் -
நீல நிறமுடைய, மலையின் - பர்வதம் போல, ஒன்னானை -
சத்துருவாகிய பிரதி வாஸுதேவனை, வீழ்ப்ப - கொன்று வீழ்த்த,
எங்கும் - அவனைச் சேர்ந்தவர்களுள்ள விடமெங்கும், இருள் -
அந்தகாரமானது, பரந்திவிட்து - வியாபித்தது, (அதாவது :
அந்தகாரம் போன்ற துக்கம் அவன் பக்கத்தில் நிகழ்ந்தது; அது
வல்லாமலும்), யாவரும் - அவன் பக்கத்தார் எவர்களும், நடுங்கி -
பயமடைந்தவர்களாகி, வீழ்ந்தார் - மூர்ச்சித்தும் வீழ்ந்தார்கள்,
(அப்போது அவ்விடத்திருந்த சாமான்ய ஜனங்கள்), திரு
இலக்ஷுமியானவள்,ஒருவர்கண் - ஒருவரிடத்திலேயே - நின்றதுண்டோ
- நிலைத்திருந்ததுண்டோ, என - என்று, உரைத்திட்டார் -
பேசினார்கள், எ-று.
ஏ - அசை. (27)
918. மலைமிசை மதியி னீழற் பருதிபோன மத்த யானைத்
தலைமிசைக் குடையி னீழல் தரணியை முழுது மாண்டார்
நிலமிசை யின்று காறும் நின்றவ ரில்லை யேனுந்
தலைவனைத் தானிவ் வாழி தடிந்தது கொடிதி தென்றார்.
(இ-ள்.) (மேலும் அவர்கள்), மலைமிசை -பர்வதத்தின்மேல்,
மதியினீழல் - சந்திரனுடைய நிழலின் கீழே, (இருக்கின்ற), பருதிபோல்
- ஒரு ஸுர்யனைப்போல, மத்தம் - மதம் பொருந்திய, யானை -
யானையினுடைய, தலைமிசை - மஸ்தகத்தின் மேலே, குடையினீழல் -
வெள்ளைக் குடையினுடைய நிழலிலே, (தங்கியிருந்து), தரணியை -
இப்பூமியை, முழுதும் - ஒருவருக்கும் பாகமில்லாமல் முழுமையும்,
ஆண்டார் - ஆண்ட அரசர்களில், நிலமிசை - இப்பூமிமேல், நின்றவர்
- நிலைபெற்றிருந்தவர்கள், இல்லையேனும் - இல்லையென்றாலும்
(அதாவது : தேக போகங்கள் அனித்திய பரியாயங்களாகிலும்),
இவ்வாழிதான் - இச் சக்ராயுதமானது, தலைவனை -
தன்னையுடையவனாயிருந்த எஜமானனை, தடிந்தது - கொன்றதாகிய,
இது - இத்தன்மையான ஸம்ஸாரமானது, கொடிது - மிகவும்
பொல்லாங்கினையுடையது, என்றார் - என்றும் சொன்னார்கள்,
எ-று. (28)
919. கருடனை யிழிந்து கைமா மிசைவந்து புரோதன் காட்டக்
குரவர்க ளுறையுங் கோடி சிலையினை வலம்வந் தேந்திப்
பெரியவ னின்ற போழ்தின் வேந்தர்விஞ் சையர்கள் விண்ணோர்
தருதிறை யோடும் வந்து தாழ்ந்தடி பரவி னாரே.
(இ-ள்.) (அதன் மேல்), கருடனை - கருட தேவனினின்றும்,
இழிந்து - இறங்கி, கைமாமிசை - யானையின்மேல், வந்து -
(ஏறிக்கொண்டு) வந்து, புரோதன் - புரோகிதன், காட்ட - காண்பிக்க,
குரவர்கள் - (ஸம்மியக்ஞானாதி குண |